லைஃப்ஸ்டைல்

Thumb Sucking : உங்கள் குழந்தைகளுக்கு கை சூப்பும் பழக்கம் உள்ளதா..? அதனை நிறுத்துவது எப்படி…?

Published by
லீனா

குழ்நதைகள் செய்யக்கூடிய அனைத்து செய்கைகளுமே ரசிக்க கூடியதாக தான் இருக்கும். ஆனால் அவர்கள் செய்ய கூடிய சில செய்கைகள் பெற்றோரை யோசிக்க வைக்கும். அப்படிப்பட்ட செய்கைகளில் ஒன்று தான் கை சூப்பும் பழக்கம். குழந்தை கை சூப்புவது இயல்பான செய்கையா என பெற்றோருக்கு யோசனை ஏற்படும்.

குழந்தைகள் கை சூப்புவது குழந்தைகளிடம் இருக்க கூடிய இயல்பான விஷயம் தான். குழந்தைகளிடம் இந்த பழக்கம் பிறந்த பின்பு வருவதில்லை. அந்த குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, தங்களது கைகளை வாய்க்குள் வைக்கும் பழக்கம் இருக்கும்.  இந்த பழக்கம் குழந்தைகள் வயிற்றில் 8 மாதமாக இருக்கும் போதே இருக்கும். இது சாதாரணமாக விஷயம் தான்.

குழந்தை பிறந்து 3 மாதத்திற்கு பின் தொடர்ந்து தங்களது கைகளை சூப்ப தொடங்குவர். கட்டை விரல், இரண்டு விரல்கள் அல்லது கைகள் முழுவதையுமே வாயில் வைத்து சூப்புவார்கள். சில சமயங்களில் கைகள் முழுவதையுமே வாயில் வைத்து குழந்தைகள் வாந்தி கூட எடுத்திருப்பார்கள்.

குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், அவர்கள் மூளையின் செயல்பாடு சரியாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் மூளையில் ஏதேனும் பிரச்னை உள்ள குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் இருக்காது. குழந்தைகள் கைசூப்பும் போது, அவர்களது மூளை அமைதலான நிலைக்கு வரும் போது அப்படியே தூங்கி விடுவார்கள். குழந்தைகள் தங்களை தாங்களே அமைதிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பது தான் கை சூப்பும் பழக்கம்.

பொதுவாக பெற்றோர்கள் கை சூப்புவதை நிறுத்த சூப்பி, மற்றும் சூப்பிக்குள் பழங்களை வைத்து சூப்ப கொடுப்பது என இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. இது மிகவியம் தவறான செயல். ஏனென்றால் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது மிகவும் எளிது. ஆனால், சூப்பி பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்துவது மிகவும் கடினம். அதே சமயம் சூப்பிகளை அடிக்கடி கொடுக்கும் போது, பற்கள் உள்ள குழந்தைகளுக்கு பல் சம்பந்தமான பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

கை சூப்பும் பழக்கக்கதை 2 வயது வரை அனுமதிக்கலாம். இந்த 2 வயது வரை குழந்தைகள் எப்போதெல்லாம் தாங்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணர்கிறார்களோ, அதாவது தாய் அருகில் இல்லாத போது, பசி உணர்வு ஏற்படும் போது, தூக்கம் வரும் போது கை சூப்புகிறார்கள்.

2 வயதிற்கு மேல் குழந்தைகள் அதிகமாக கை சூப்புகிறார்கள் என்றால் அதனை தடுக்க வேண்டும். ஆனால், இதனை தடுக்க வேப்ப எண்ணெய் தடவுவார்கள். இது மிகவும் தவறானது. இது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட வலிப்பு ஏற்படும் போது, அது மூளையை பாதிக்கும்.

பெரும்பாலான குழந்தைகள் 2 வயதிற்கு மேல் கை சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுவார்கள். அப்படி விடாத குழந்தைகளுக்கு, குழந்தைகளை ஊக்குவிக்கும் வண்ணம் பேச வேண்டும். அதாவது, நீ கை சூப்பாமல் இருந்தால் உனக்கு பிடித்த பொம்மையை வாங்கி தருவேன் என அவர்களிடம் கூற வேண்டும். அப்படி சொல்லும் போது அவர்கள் கை சூப்பாமல் இருக்க முயற்சிப்பார்கள்.

நாம் சொன்னதை கேட்டு குழந்தைகள் கை சூப்பாமல் இருக்கும் போது, அவர்களை பாராட்ட வேண்டும். அவர்கள் சூப்பும் கை விரலில் பேண்டேஜ், அல்லது கையுறை போட்டு விடலாம். அதே சமயம் குழந்தைகளை திட்டினாலோ, அடித்தாலோ அவர்கள் இந்த பழக்கத்தை மறைமுகமாக கடைபிடிப்பார்கள். குழந்தைகள் 2 முதல் இரண்டரை வயது வரை கை சூப்புவது பிரச்சனையில்லை, ஆனால் அந்த வயதையும் தாண்டி கை சூப்பும் போது மேற்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

Published by
லீனா

Recent Posts

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

48 minutes ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

2 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

2 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

3 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

5 hours ago