மத்தி மீனின் ரகசியம் இதுதான் ..! ஓ .. இதனால தான் சூப்பரா இருக்கோ ?

Published by
அகில் R

Mathi Fish : நம் எல்லாருக்கும் மத்தி மீன் அதாவது நமக்கெல்லாம் சாளை மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் அதற்கு கரணம் அந்த மீனின் சுவை தான். தமிழ் நாட்டிலும், நமக்கு அடுத்துள்ள கேரளத்திலும் இந்த மத்தி மீன் குழம்பை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் நம் ஊரை விட கேரளத்தில் இந்த மத்தி மீன் கறியை மிக காரத்துடன் வைப்பார்கள். தற்போது, கேரளாவில் செய்யும் அந்த காரமான மத்தி மீன் கறியை பற்றியும் அதன் பயன்களையும் பற்றியும் இதில் பார்க்கலாம்.

தேவையானவை : 

நமக்கு தேவையான அளவிற்கு மத்தி மீனை எடுத்து அதை நன்கு கழுவ கொள்ள வேண்டும். மீன் வாங்கும் போதே அதை நாம் கவனமாக பெரிய அளவிலான மீன்களை வாங்க வேண்டும். அப்படி பெரிய மீனை வாங்கினால் அது சுவையில் நன்றாக இருக்கும். சிறிய வெங்காயம், கடுகு, சீரகம், வெந்தயம், மிளகாய் தூள், ஊற வைத்த புளி, நல்லெண்ணெய், பச்சை மிளகாய்.

Read More :- பிரியாணி ஊரே மணக்க .. மசாலாவை இப்படி ரெடி பண்ணுங்க.. சூப்பரா இருக்கும்..!

செய்முறை :

முதலில், மிளகாய் பொடியை தண்ணீருடன் சேர்த்து உள்ளங்கை அளவிற்கு உருண்டை பிடித்து எடுத்த கொள்ள வேண்டும். பின் 100g புளியை அதன் பிறகு சிறுது நேரம் கழித்து கடாயில் நல்லெண்ணெய்  ஊற்றி அதை சூடாக்கி கடுகு, கருவேப்பிலையை அதில் இடவேண்டும்.  அது நன்கு தாளிக்கும் நிலையில் வந்த உடன் உரித்து வைத்த சிறு வெங்காயத்தை அதில் வெட்டியோ அல்லது முழுவதுமாகவோ அதனுடன் இட்டு நன்கு வறுக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கிய உடன் இரண்டு பச்சை மிளகாயை வெட்டி அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு ஊற வைத்த புளியை நன்கு பிசைந்து அதன் சாரை மட்டும் கடாயில் ஊற்ற வேண்டும். அது கொதி நிலைக்கி வந்த பிறகு உருண்டை பிடித்த மிளகாய் தூளை அதனுடன் இட்டு கிண்ட வேண்டும். பின்பு தேவையான அளவுக்கு தண்ணீர் மட்டும் உப்பு சேர்த்து கொதிக்கும் வரை அவ்வப்போது கிண்டி விட வேண்டும்.

பின் கொதிக்க துவங்கிய உடன் கழுவி வைத்திருக்கும் மத்தி மீனை அதனுடன் சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டும். அவ்வளவு தான் கொதித்தவுடன் இறக்கி வைத்தால் கேரளா மத்தி மீன் கறி ரெடி ..!

பயன்கள் :

100g மத்தி மீனில் புரத சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர் சத்து 66.70 கிராமும் உள்ளது. இந்த மத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருப்பதால் இதய நோய் ஏற்படும் வாய்ப்பை தடுக்கும். இதில் வைட்டமின் B12 இருப்பதால் பல்வேறு புற்று நோய் வரும் வாய்ப்பை தடுக்கிறது.

இந்த மத்தி மீனை சாப்பிட்டால் கண் பார்வையும் நன்றாக தெரியும். மேலும், மூளை நரம்பு சம்மந்த பட்ட நோய்கள், ஆஸ்த்துமா, மன அழுத்தம் போன்றவற்றை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை கட்டுக்குள் வைத்து கொள்கிறது.

இந்த மத்தி மீனை இது போல செய்து வீட்டில் உள்ள அனைவர்க்கும் கொடுத்து பயன் அடையுங்கள் ..!

Recent Posts

முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…

18 minutes ago

தமிழக வேளாண் துறையின் சாதனைகள்.., அமைச்சர் கூறிய நீண்ட பட்டியல்….

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…

24 minutes ago

வலுக்கும் அதிமுக மோதல்? சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…

47 minutes ago

தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!

ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…

1 hour ago

TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!

சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…

2 hours ago

ஐபிஎல் 2025 அப்டேட்! யாரெல்லாம் விளையாடமாட்டாங்க தெரியுமா? பும்ரா முதல் சாம்சன் முதல்…

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…

3 hours ago