வெயில் காலத்தில் கைகள் கருத்துப்போய்விட்டதா? இதை செய்தாலே போதும்..!

Published by
Sharmi

வெயில் காலத்தில் நாம் வெளியே சென்று வந்தாலே போதும் நிறம் கருமையாகிவிடும். இந்த கருமை மறைய இந்த குறிப்பு போதும்.

பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருமை நிறமாக மாறிவிடும். இது போன்ற சூழ்நிலையில் முகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு கைகளுக்கும் கொடுக்க வேண்டும். கைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தயிர், எலுமிச்சை மற்றும் சாதம்: முதலில் 1 டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் அரிசி தூள் இந்த பேக் செய்வதற்கு தேவை. இந்த பொருட்கள் அனைத்தையும் கலந்து கைகளில் இந்த பேக்கை தடவவும். இதனைக் கொண்டு சிறிது நேரம் கைகளை மசாஜ் செய்யவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். இதிலுள்ள எலுமிச்சை ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது அதே நேரத்தில் அரிசி சருமத்தில் அழுக்குகளை வெளியேற்றுகிறது. இதனால் கைகள் பளிச்சென்று இருக்கும்.

காபி ஸ்க்ரப்: இந்த ஸ்க்ரப் செய்ய காபி, அரை தேக்கரண்டி தேன் மற்றும் அரை தேக்கரண்டி பால் தேவைப்படும். இந்த பொருட்கள் அனைத்தையும் கலந்து ஒரு ஸ்க்ரப் தயார் செய்யுங்கள். இப்போது இந்த ஸ்க்ரப் மூலம் கைகளை சிறிது நேரம் மசாஜ் செய்து, அதன் பிறகு வெற்று நீரில் கைகளை கழுவவும்.

பப்பாளி: பப்பாளி கருமை நீங்க மிகவும் அதிக அளவில் உதவும். இதற்கு உங்களுக்கு 1 டீஸ்பூன் பப்பாளியின் சதைப்பகுதி மற்றும் 1 டீஸ்பூன் பப்பாளி விதைகள் தேவைப்படும். முதலில் பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதன் சதைப்பகுதியை பிசைந்து கொள்ளவும். இப்போது அதனுடன் பப்பாளி விதைகளை சேர்த்து 5 நிமிடம் உங்கள் கைகளை மசாஜ் செய்யவும். இதைச் செய்த பிறகு, சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத்தை மிகவும் ஆழமாக சுத்தம் செய்ய உதவும்.

தயிர் மற்றும் மஞ்சள் பேக்: இதற்கு அரை கப் தயிர் வேண்டும். அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் தேவை. இதை இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை கைகளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

இது போன்ற ஒரு முறையில் தொடர்ந்து செய்து வர உங்கள் கைகளின் கருமை மறைந்து நிறம் மெருகேறும்.

Recent Posts

பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…

5 hours ago

மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

7 hours ago

விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…

8 hours ago

“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…

8 hours ago

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?

சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…

9 hours ago

“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!

சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…

10 hours ago