இல்லத்தரசிகளே! இதோ உங்கள் வேலையை எளிதாக்க சூப்பரான டிப்ஸ் ரெடி..!
Published by
K Palaniammal
Domestic work [File Image]
காலை எழுந்தவுடன் தொடங்கி இரவு தூங்கும் வரை வீட்டின் வேலை செய்யும் இல்லத்தரசிகளே… உங்களின் பணிச்சுமையை எளிதாக மாற்ற சில குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பின்பு தண்ணீர் சிறிதளவு சேர்த்து மாவு பிசைந்தால் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும். இதனால் பாத்திரம் கழுவுவதற்கு சுலபமாகவும் இருக்கும்.
முட்டை வாங்கி வந்த பிறகு அதை தண்ணீரில் போட்டால் முட்டை மேலே மிதக்க கூடாது அவ்வாறு இருந்தால் அது நீண்ட நாள் பட்ட முட்டையாகும்.
இட்லி நன்றாக உப்பி வர தண்ணீர் கொதித்த பிறகு மாவு ஊற்றி வைக்க வேண்டும்.
மாவு தோசை கல்லில் ஒட்டாமல் வர சிறிதளவு தண்ணீரில் உப்பு சேர்த்து சூடான தோசை கல்லில் தெளித்துவிட்டு அதை துணியால் துடைத்து ஊற்றினால் தோசை ஒட்டாமல் வரும்.
பூண்டு தோலை ஒரு துணியில் அதை சூடான கல்லில் வைத்து எடுத்து வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குணமாகும்.தலைவலி இருந்தால் கூட இவ்வாறு செய்யலாம்.
மிக்ஸி ஜார் லூசா ஆகிவிட்டால் மூடியின் நடுப்பகுதியில் ரப்பர் பேண்ட் போட்டு டைட் செய்து விட்டு அரைத்தால் அரைக்கும் போது எதுவும் கசியாது.
மிக்ஸி பிளேடு கூர்மையாக கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு கூர்மையாகிவிடும் இதை மாதம் ஒரு முறை செய்து வரலாம்.
ஹாட் பாக்ஸ் சில நாட்களுக்குப் பிறகு அதில் வைக்கப்படும் உணவுகளுக்கு சூடு குறைந்து விடும் இதனை தடுக்க சுடு தண்ணீரை கொதிக்க வைத்து ஹாட் பாக்சில் ஊற்றி ஒரு அரை மணி நேரம் மூடி வைத்து பிறகு உணவுகளை சேமித்து வைத்தால் சூடு குறையாமல் இருக்கும்.
வர மிளகாய் பதத்து போகாமல் இருக்க மற்றும் பூஞ்சை தொற்று வராமல் இருக்க அதை ஒரு பாத்திரத்தில் கல் உப்பு சேர்த்து லேசாக வறுத்து சேமித்து வைக்கலாம். இவ்வாறு செய்தால் நீண்ட நாள் நன்றாக இருக்கும்.
பாலை பாத்திரத்தில் ஊற்றும் முன் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து பிறகு பாலை ஊற்றினால் பாத்திரத்தில் சிறு சிறு புள்ளிகள் வராமல் இருக்கும்.
பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்றவற்றை கலக்குவதற்கு முன் சர்க்கரை சேர்த்த பிறகு இவற்றை கலக்கினால் டம்ளரில் ஒட்டாமல் இருக்கும்.
உடனடியாக புளிக்கரைசல் வேண்டும் என்றால் சுடு தண்ணீரில் கரைத்தால் புளி கரைசல் சுலபமாக கிடைத்துவிடும்.
இந்த குறிப்புகளை நினைவில் வைத்து உங்கள் வேலைகளை எளிதாக்கிக் கொள்ளுங்கள்..
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…