ஓவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் பட உள்ளது. உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் வில்லியம்ஸ் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் என்பவர் 1872 -ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரராக இருந்தார். ஜாக்சன் ஸ்மார்ட்க்கு ,எல்லன் என்ற மனைவி இருந்தார்.இந்த தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான் சொனாரா ஸ்மார்ட் டோட்.
சொனாரா ஸ்மார்ட் டோட் 16 வயதாக இருக்கும் போது தனது தாய் ஆறாவது பிரசவத்திற்கு சென்றபோது எதிர்பாராத விதமாக உயிர் இழந்தார். தன் மனைவி எல்லன் இறந்த பிறகு ஜாக்சன் ஸ்மார்ட் மறுத்திருமணத்தை பற்றி சிறிதும் யோசிக்காமல் தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மட்டுமே வாழ்ந்தார்.
ஜாக்சன் ஸ்மார்ட் இந்த செயல் அவரது மகன் சொனாரா ஸ்மார்ட்டை வெகுவாக கவர்ந்தது.இந்நிலையில் 1909 ஆம் ஆண்டு சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதையறிந்த சொனாரா ஸ்மார்ட் என் தந்தையின் தியாகம், அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என அவர் கூறி வாதமிட்டார்.
மேலும் என் தந்தையின் பிறந்தநாளை தந்தையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என தேவாலயத்தில் ஆவண செய்தார். இதற்கு அனுமதியும் கொடுக்கப் பட்டது.அன்று முதல் சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் தந்தையர் தினத்தை அங்கீகரித்தார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…