லைஃப்ஸ்டைல்

புரட்டாசி மாத ஸ்பெஷல்..! மீன் வறுவலை விட அட்டகாசமான சுவையில் கருனை கிழங்கு வறுவல் இதோ..!

Published by
லீனா

புரட்டாசி மாதம் என்றாலே பெரும்பாலானோர் மீன், இறைச்சி,முட்டை போன்ற உணவுகளை தவிர்த்து விடுவர். இந்த புரட்டாசி மாதத்தில் காய்கறி உணவுகளை தான் செய்து சாப்பிடுவர். ஆனால், மாமிச பிரியர்கள் மீன், இறைச்சி,முட்டை போன்ற உணவுகளை சாப்பிடாமல், இந்த புரட்டாசி மாதத்தை கடப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு,  மீன் வறுவலை மிஞ்சும் அட்டகாசமான சுவையில் கருனை கிழங்கு வறுவல் செய்து கொடுக்கலாம்.

கருனை கிழங்கின் பயன்கள் 

இந்த கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C  போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இந்த கிழங்கை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். கருணைக் கிழங்கீழ் நார்சத்து அதிகமாக காணபப்டுவதால் இது, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்கவும் பயன்படுகிறது.

கருணைக் கிழங்குகள் பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குவதால், இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க பயன்படுகிறது. இந்த கிழங்கில் உள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. எனவே கருணைக் கிழங்குகளை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

தற்போது இந்த பதிவில் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான கருனை கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • கருனை கிழங்கு – கால் கிலோ
  • எண்ணெய் தேவையான அளவு
  • மிளகு தூள் – 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • சோம்பு தூள் – கால் ஸ்பூன்
  • தனியா தூள் – கால் ஸ்பூன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின், கருணைக்கிழங்கை தோல் உரித்து மிகவும் மெல்லியதாக வெட்டிக் கொள்ள வேண்டும். பொரிப்பதற்கு  ஏற்றவாறு நமக்கு பிடித்த வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம்.

பின் அதில் மிளகாய் தூள், சோம்பு தூள், தனியா தூள், சிறிதளவு உப்பு, மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி அவற்றை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் கொதித்த பின் அதனுள்  தயார் செய்து வைத்துள்ள கருணைக்கிழங்கை அதனுள் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.

இந்த கிழங்கை சாதத்துடன் கொடுத்தால், குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக அசைவ பிரியர்கள் இவ்விரு செய்து கொடுக்கும் போது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், அலர்ஜி பிரச்னை கருனை கிழங்கில் செய்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

Published by
லீனா

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago