அடடே!பீட்ரூட்டை வைத்து குளியல் பொடி செய்யலாமா? இது தெரியாம போச்சே..!

beetroot bath powder

பீட்ரூட்டை நம் உணவுகளில் பலவிதமாக செய்து ருசித்திருப்போம். ஆனால் அதை வைத்து குளியல் பொடி செய்யலாம் .வாங்க அது  செய்வது எப்படி என்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் இப்பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு= ஒரு கப்
பீட்ரூட்= மூன்று
ரோஸ் வாட்டர்
பால்

செய்முறை

பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும், கட்டி இல்லாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு மிதமான தீயில் பீட்ரூட்டை அதன் தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும். பிறகு அதை ஆற வைத்து,ஆறிய  பிறகு அதிலே அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும். பின்பு ஒரு நாள் முழுவதும் அதை வெயிலில் காய வைக்க வேண்டும் ,ஏனென்றால் அதில் ஈரப்பதம் கொஞ்சம் இருக்கும் அதனுடன் வைத்தால் விரைவில் கெட்டுப் போகும். காய்ந்த பிறகு அதை சல்லடை வைத்து சலித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து 15 நாள் வரை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

சோப்பு போட்டு குளித்த பிறகு இந்த பீட்ரூட் பவுடரை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அல்லது உங்கள் உடலுக்கு தேவையான அளவு எடுத்துக் கொண்டு ரோஸ் வாட்டர் அல்லது காய்ச்சிய பாலை பாலாடையுடன் சேர்த்து நன்கு கலந்து உடலில் தேய்த்து ஐந்து நிமிடம் வைத்து மசாஜ் செய்து பிறகு கழுவிக்கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதங்கள் பயன்படுத்த வேண்டும்.

இதில் நாம் அரிசி மாவு சேர்த்துள்ளதால் நல்ல ஸ்கிரப்பராக பயன்படுகிறது. பீட்ரூட் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கிறது. ஒரு மாதங்கள் இதை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காண முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan