idli podi
இட்லி பொடி -கமகமவென வாசனையுடன் இட்லி பொடி செய்வதன் ரகசியத்தை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும் .பிறகு உளுந்து கடலைப்பருப்பு, கல் உப்பு ,தோலுடன் கூடிய பூண்டு ஆகியவற்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலையும் வறுத்தெடுத்துக் கொள்ளவும். பிறகு அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தையும் வறுக்கவும். இப்போது இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாயை இரண்டாக்கி வறுத்தெடுத்துக் கொள்ளவும். பிறகு இவற்றை நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும்.
ஆறிய பிறகு மிக்ஸியில் மிளகாய் ,கல் உப்பு, பெருங்காயம் இவற்றை ஒரு நிமிடம் அரைத்துக் கொள்ளவும் .அதன் பிறகு கடலைப்பருப்பு, உளுந்து ,அரிசி, சேர்த்து இரண்டு சுற்று அரைத்து பிறகு கருவேப்பிலை மற்றும் பூண்டை சேர்த்து இட்லி பொடி பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது கம கம வென வீடு மணக்கும் இட்லி பொடி தயார். இதை சூடான இட்லியுடன் தேவையான அளவு நம் தயாரித்துள்ள இட்லி பொடியை சேர்த்து அதனுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அமர்க்களமாக இருக்கும்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…