இஞ்சி நீரை குடித்து வந்தால் எப்படிப்பட்ட நன்மைகள் உடலில் உண்டாகும்…?

Published by
Sulai

பல வகையான மருத்துவ பயன்கள் கொண்ட உணவு பொருள் தான் இஞ்சி. இதை நமது அன்றாட உணவில் சிறிதளவு சேர்த்து கொள்வோம். உடல் ஆரோக்கியதை அதிகரிக்க கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது.

இதனை டீ போன்றோ அல்லது நீரில் கலந்து குடித்தாலோ பல நன்மைகள் நமக்கு உண்டாகும். இஞ்சியை இவ்வாறு குடிப்பதன் மூலம் நம் உடலில் 5 அற்புதங்கள் நடக்கிறதாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

சர்க்கரை நோய்
இஞ்சி நீருடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் பல நலன்கள் நமக்கு உண்டாகும். அதில் ஒன்று தான் சர்க்கரை நோயின் அளவை உடலில் குறைப்பதும். இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க இஞ்சி நீர் உதவும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

உடல் எடை
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி நீரை குடித்து வருவதன் மூலம் உடல் எடை எளிதில் குறையுமாம். மேலும், உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றவும், இரத்தத்தில் உள்ள அதிக படியான சர்க்கரை அளவை குறைக்க இஞ்சி நீர் உதவும்.

நச்சுக்களை வெளியேற்ற
இஞ்சி நீரை குடித்து வருவதன் மூலம் வயிற்று பகுதியில் சேர்ந்துள்ள நச்சுக்களை மிக எளிதாக வெளியேற்றி விடுலாம். மேலும், உங்களின் எதிர்ப்பு சக்தியை கூட்டவும் இது பயன்படும். எனவே, அன்றாடம் இஞ்சி நீரை குடித்து வாருங்கள்.

முடி மற்றும் முகம்
முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்தால் அதை சரி செய்ய இஞ்சி நீர் பயன்படும். காரணம் இதிலுள்ள வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் ஏ என்பவைதான். இவை முகத்தையும் பொலிவுடன் வைத்து கொள்ள உதவும்.

மூளையின் திறன்
மூளையின் நரம்பு பகுதியை பாதிப்படையாமல் பார்த்து கொள்ள இஞ்சி அருமருந்தாக செயல்படும். மேலும், ஞாபக திறனை அதிகரிக்கவும், மூளையின் செல்களை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளவும் இஞ்சி நீர் உதவுகிறது. ஆதலால், தொடர்ந்து இஞ்சியை நீரை குடித்து வாருங்கள்.

Published by
Sulai

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

30 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

36 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

53 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago