இன்றைய தலைமுறையினர் பெரிதும் அவதிக்கு உள்ளாகும் பிரச்சனைகளில் ஒன்று இளநரை. இப்பிரச்சனைக்கு பல செயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி இந்த பிரச்சனைகளை அதிகபடுத்தி கொண்டவர்கள் நம்மில் எத்தனை நபர்கள் இருக்கிறோம்.
சாதாரண முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கில் பல விளம்பரங்களையும் பார்த்து விட்டு பலவிதமான கெமிக்கல் கலந்த பொருள்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். இருப்பினும் அந்த பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வுகள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை.
நாம் தலைக்கு குளிக்கும் போது பல கெமிக்கல் கலந்த பல ஷாம்புகளை பயன்படுத்துவதாலும் இளநரை பிரச்சனை ஏற்படலாம்.எனவே பலவிதமான கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை உபயோகிப்பதை விட்டுவிட்டு நாம் இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி சீகைக்காய் , செம்பருத்தி முதலிய பொருட்களை கொண்டு இயற்கையான வழிமுறைகளை உபயோகபடுத்தி தயாரிக்கும் ஷாம்பூக்களை பயன்படுத்தலாம்.
எனவே இந்த பிரச்சனைகளுக்கு இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி தீர்வு காணலாம். இந்த பதிப்பில் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி இளநரையில் இருந்து நமது அழகிய முடியை பாதுகாப்பது எப்படி என்பதை நாம் படித்தறிவோம்.
பொதுவாக நம்முடைய தலைமுடியில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாக நெல்லிக்காய் பயன்படுகிறது.நெல்லிக்காயை நாம் தினமும் பயன்படுத்துவதால் நமக்கு பல சத்துக்களை கொடுக்கிறது.குறிப்பாக நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது.எனவே நெல்லிக்காய் நமது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு தீர்வாக விளங்குகிறது.
நெல்லிக்காய் 5, மருதாணி இலை,கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி,2 லவங்கம் இவற்றை தனித்தனியே அரைத்து சாறெடுத்து ஒன்றாக கலக்க வேண்டும்.இதனுடன் 3 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து தலையில் பூசி அரைமணி நேரம் கழித்து தண்ணீர் விட்டு அலசுங்கள்.இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் இளநரை நம்மை நெருங்காது.
கடுக்காய் சித்த வைத்தியத்தில் பல அளப்பரிய நன்மைகளை செய்து வருகிறது. எனவே இது பல வகையான உடல் நோய்களுக்கு சித்த வைத்தியத்தில் பயன்படுத்தும் மிக சிறந்த மூல பொருளாக விளங்குகிறது.இது உடலில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை கட்டுப்படுத்த சிறந்த மருந்தாகும்.
பிஞ்சு கடுக்காய் ,நெல்லிக்காய், கருவேப்பிலை இவை மூன்றையும் சம அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.இவை அனைத்தையும் இடித்து வைத்து கொள்ள வேண்டும்.இவை மூழ்கும் அளவிற்கு நல்லெண்ணெய் எடுத்து காய்ச்சி அதில் இந்த மூன்று பொருள்களையும் ஊற விட வேண்டும்.
நாம் தலைக்கு குளிக்கும் நேரங்களில் இந்த எண்ணையை லேசாக சூடு பண்ணி தலைக்கு தேய்த்து குளித்து சீகைக்காய் போட்டு அலசலாம்.இவ்வாறு செய்து வர படிப்படியாக இளநரை இருந்த இடமும் தெரியாது.முடியும் கறுப்பாகும்.
வேப்பங்கொளுந்து உடலில் ஏற்படும் பல நோய்களை கட்டுப்படுத்தும் அருமருந்தாக விளங்குகிறது.மேலும் இது மிக சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. இது பல் சரும பிரச்சனைகளுக்கும் மிக சிறந்த தீர்வாகும்.
வேப்பங்கொளுந்து ,நெல்லிமுள்ளி,கறிவேப்பிலை ,பிஞ்சு கடுக்காய் ,அவுரி விதை ஆகியவற்றை சமஅளவு எடுத்து நைசாக அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். இதில் ஆலிவ் ஆயிலை விட்டு வெயிலில் வைத்து எடுக்கவும்.இந்த எண்ணையை தினமும் தடவி வந்தால் நரைமுடி பிரச்சனை மிக விரைவில் குணமாகும்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…