லைஃப்ஸ்டைல்

ஆஹா! வாழை இலையில் தினமும் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மையா…

Published by
K Palaniammal

“விருந்து வைப்பதில் கூட விஞ்ஞானம் படைத்தவன் நம் தமிழன். ஆமாங்க நம் முன்னோர்கள் எவ்வளவோ இலைகள் இருந்தாலும் வாழையிலேயே சாப்பிடுவதற்கு உகந்த இலை என பயன்படுத்தினார்கள். இலையில் தினமும் நாம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் என இந்த பதிவில் பார்ப்போம்.

வாழை இலை வாழ வழி வகுக்கும்என்பார்கள் . இலையில் சூடான உணவுகள் படும்போது உணவில் உள்ள அனைத்து நுண் சத்துக்கள் மற்றும் இலையின் சத்துக்களும் சேர்ந்தே நம் உடலுக்கு கிடைக்கும். வாழை இலையில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது இதில் உள்ள பாலித்தினால் என்ற ஆன்டி  ஆக்சிடென்ட் நம் உடலில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இலையில் உள்ள குளோரோபில் அல்சர் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் தீர்வு ஆகிறது.

தினமும் நாம் இலையில்  சாப்பிட்டு வந்தால் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. சிறுவயதிலே முதியவர் போன்ற தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.இளநரையை கட்டுப்படுத்துகிறது . மன அழுத்தம் உள்ளவர்கள் பசியின்மையால் அவதிப்படுவார்கள் அந்த நேரங்களில் மூன்று வேளையும்  வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் பசியை தூண்டும். பித்தம் வாதம் கபம் போன்றவற்றை நம் உடலில் சமநிலையாக வைத்துக் கொள்ளும்.

வாழையிலையை  வெட்டிய பிறகும் அதன் ஆக்சிசன் வெளிப்பட்டு கொண்டே தான் இருக்கும்.இது வாழைஇலைக்கு உகந்த சிறப்பு . பழங்கால முதல் இன்று வரை கிராமப்புறங்களில் பாம்பு கடித்தால் வாழ தண்டின் சாறை கொடுப்பார்கள் . இது விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

அது மட்டுமல்லாமல் இயற்கை மருத்துவமனைகளில் தோல் நோய் மற்றும் அலர்ஜி அரிப்புக்கு வாழை இலை குளியல் முறை பயன்படுத்துகிறார்கள். அதாவது வாழை இலையில் ஒரு சில மணி நேரங்கள் வரை இளம் வெயிலில் படுத்துக்கொள்ள வேண்டும் . இவ்வாறு செய்தால் தோல் நோய்கள் குணமாகும்.

எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளிலும் வாழைமரம் தான் முதலில் வைக்கப்பட்டிருக்கும் ஏனென்றால் மக்கள் கூடும் இடங்களில் ஏதேனும் அசம்பாவிதங்களோ விஷக்கடிகளோ ஏற்பட்டால் முதலுதவியாக வாழை இலையோ வாழை மரத்தின் சாறோ பயன்படுத்தப்படும். அதற்காகவே அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் வைக்கப்பட்டிருக்கும்.

சின்னம்மை பாதிக்கப்பட்டவர்களை வாழை இலையில் தேன் தடவி படுக்க வைப்பதன் மூலம் விரைவில் குணமாகும். ஆகவே தினமும் நம் வாழையிலேயே சாப்பிட்டு வந்தால் அது நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழை இலையில்  சாப்பிட்ட பிறகு அந்த இலை கூட கால்நடைகளுக்கு தீவனமாகவும் மண்ணிற்கு உரமாகவும் பயன்படுகிறது.உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஷ்டிக்க்கை தவிர்த்து

Published by
K Palaniammal

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

7 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

8 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

8 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

9 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

9 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

10 hours ago