OilBath [File Image]
எண்ணற்ற உடல் ஆரோக்கியத்தை தரும் எண்ணெய் குளியலை செய்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் எப்போது குளிப்பது, எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு என்னெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நாம் பொதுவாக வாரம் ஒரு முறை எண்ணெய் குளிக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலைகளில் அது குறைந்து, எப்போதாவது தான் என்ற நிலை வந்துள்ளது. ஆனால் அவ்வாறு செய்யாமல் கண்டிப்பாக வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது எண்ணெய் குளியலை நாம் பின்பற்ற வேண்டும்.
எண்ணெய் குளியலுக்கு உகந்த எண்ணெய் நல்லெண்ணெய். இதை நாம் காலை சூரிய உதயத்திற்கு பின் இளம் வெயிலாக இருக்கும்போது தேய்த்து அரை மணி நேரம் கழித்து சுடு தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்கவும். இவ்வாறு நாம் வாரம் ஒரு முறை செய்து வந்தால் உடலில் வெப்பம் தனியும்.
வைட்டமின்-டி மற்றும் கால்சியம் நம் உடலுக்கு கிடைக்கும். இது நமது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கண்ணிற்கு குளிர்ச்சி தரும். கண் சூடு, கண் எரிதல் போன்றவற்றிற்கு நல்ல பலன் கிடைக்கும். தலைமுடியின் வேர் கால்களுக்கு நல்ல ஊட்டம் அளிக்கும்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்களில் ஷாம்பூ மற்றும் சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். கடலை மாவு மற்றும் சீயக்காயை பயன்படுத்த வேண்டும்.
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…