plank (1)
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் உடற்பயிற்சியை பெரும்பாலானோர் செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு பாகத்திற்கு என்று தனித்தனி பயிற்சிகளும் உள்ளது .ஆனால் ஒட்டுமொத்த உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த பிளாங்க் உடற்பயிற்சி சிறந்த பலனாக இருக்கிறது.
ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் இந்த பிளாங்க் உடற்பயிற்சியை செய்து வந்தால் பல்வேறு நன்மைகளை பெற முடியும். குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இது மிகச் சிறந்த பயிற்சியாக உள்ளது.
சரியான முறையில் இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது தண்டுவடம் நேராக்கப்படுகிறது. கூன் விழுவது தடுக்கப்படுகிறது.
ஒரு நாள் ஒன்றுக்கு மூன்றிலிருந்து ஐந்து வரை கலோரிகள் கரைக்கப்படுகிறது. முதுகு வலி குறையும் ,தொப்பை, தொடை பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைக்கப்படுகிறது.
மேலும் மெட்டபாலிசத்தை சீராக்க உதவுகிறது .உடல் சோர்வு, மன அழுத்தம், மன குழப்பம் போன்றவற்றிற்கு நல்ல தீர்வை கொடுக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தையும் கொடுக்கிறது.
பிளாங்க் செய்யும் போது கைகளை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். கிராசாக வைத்துக் கொண்டால் தோள்பட்டையில் வலி ஏற்படும். அதேபோல் முதுகு பகுதி கீழ்நோக்கியும் வயிறு தரையில் தொடும்படி செய்யக்கூடாது. இதனால் முதுகு வலி ஏற்படும்.
முதுகு பகுதி சற்று மேல் நோக்கி உடல் முழுவதும் சமமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் கழுத்துப் பகுதியை மேல்நோக்கி வைக்கும் போது கழுத்து வலி ஏற்படும் ,அதனால் கழுத்தை நேராகவோ அல்லது கீழ் நோக்கியோ வைத்துக் கொள்ளலாம். கால் பகுதியை மிக ஒட்டியும் அகலமாகவும் வைக்காமல் நேராக வைத்துக் கொள்ளவும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கீழ் முதுகு வலி உள்ளவர்கள், தோள்பட்டை வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி செய்வதை தவிர்க்க வேண்டும்.
எனவே இந்த பிளாங்க் உடற்பயிற்சியை முறையாக செய்து அதன் முழு பலனையும் பெறுங்கள்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…