eye care (1)
Eye care tips-கோடை காலத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி என இப்பதிவில் காணலாம்.
நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி விட்டது. இந்த வெப்பத்தால் கண்களில் பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
வெயிலில் வெளியே செல்லும்போது அதிகமான புற ஊதா கதிர்களால் கண்கள் பாதிக்கப்படும்.இதனால் கண்களில் சதை வளருதல், கண்களில் கட்டி வருதல் ,கண் வலி போன்றவை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கண் கண்ணாடிகளை பயன்படுத்துவது மிக அவசியம்.
வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பலரும் ஏசி அறைக்குள் 24 மணி நேரமும் இருக்கிறார்கள். இதனால் கண் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது .இதன் காரணமாக கண் சிவத்தல், கண் அரித்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். மேலும் ஏசி காற்று நேரடியாக முகத்தில் படும்படி இருப்பதை தவிர்க்க வேண்டும்.
கணினியில் வேலை செய்பவர்கள் 20.. 20.. [டுவெண்ட்டி டுவெண்ட்டி ]ரூல்ஸை கடைபிடிக்க வேண்டும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கணினியின் திரையை தவிர்த்து வேறு ஏதேனும் மரங்களையோ செடிகளையோ பார்க்க வேண்டும்.
மேலும் கண்களை அடிக்கடி மூடி திறக்க வேண்டும் இதற்கு பெயர் தான் 20 20 ரூல்ஸ் என கூறுவார்கள்.இவ்வாறு செய்யும் பொழுது கண்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் .
சுத்தமான தண்ணீரை கொண்டு கண்களை அடிக்கடி கழுவ வேண்டும். அல்லது தண்ணீரில் கண்களை சுழற்றிக் கொடுக்க வேண்டும் இதனால் கண்களில் தூசி ஏதேனும் இருந்தால் வெளியேறிவிடும் .
இரு உள்ளங்கைகளையும் தேய்த்தால் சூடு வரும் அதை கண்களில் வைத்து ஒத்திக் கொடுத்தால் கண் வீக்கம் வராமல் தடுக்கலாம் .மேலும் கண்களுக்கும் ஓய்வு கிடைக்கும். விட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகளை நம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விட்டமின் ஏ சத்து கண்களுக்கு மிக நல்லது. இந்த விட்டமின் ஏ பச்சை நிற கீரைகள் கேரட், பப்பாளி பழம், மாதுளை, மீன் வகைகள் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. மேலும் மருத்துவரின் பரிந்துரையின்படி மீன் மாத்திரைகளையும் உட்கொள்ளலாம்.
ஆகவே இந்த கோடை வெப்பத்தை நாம் கடக்க வேண்டும் என்றால் நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம். எனவே விழிப்போடு இருந்து விழியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…