நாம் காலை நேரங்களில் அதிகமாக இன்டலியை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான இட்லி டோக்ளா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கேரட்டை வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பீன்ஸ், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும். மேலும் மற்ற பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி , கறிவேப்பிலை போட்டு வதக்கவேண்டும். அதனுடன் நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து 5 நிமிடம் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இட்லியை உதிர்த்து அதனுடன் தயிர் சேர்க்க வேண்டும். பின் வதக்கி வைத்துள்ள காய்கறிகள், கொத்தமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும். ஒரு வட்டமான தட்டில் பிசைந்து கலவையை சமமாக பரப்பி வைக்க வேண்டும். பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் டோக்ளா தயார் செய்த தட்டை வைத்து மூடி, 10 நிமிடம் வேகவிட்டு எடுக்க வேண்டும். வெந்ததும் அதில் இட்லி பொடி தூவி பரிமாறவேண்டும். இப்போது சுவையான இட்லி தோசை தயார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…