Channa masala– சென்னா மசாலா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம் .
சுண்டலை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், முந்திரி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு தக்காளியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் .அரை கப் சுண்டலை தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .இப்போது பூண்டு மற்றும் , பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள் ,மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெயிலேயே வதக்கவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து கிளறி விடவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்க்கவும். இப்போது இதன் பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். பிறகு அரைத்து வைத்துள்ள சுண்டலையும் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 1 கொதி வந்ததும் சுண்டலையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான சென்னா மசாலா தயார்.
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…