சத்தான கொண்டை கடலை சுண்டல் செய்வது எப்படி?

Default Image

சத்தான கொண்டைக்கடலை சுண்டல் செய்யும் முறை. 

நம்முடைய குழந்தைகள் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது, தேநீருடன் சேர்த்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று விரும்புவது உண்டு. அப்பொழுது நாம் கடையில் வாங்கிக் கொடுக்கும் உணவுகளைத் தவிர்த்து, வீட்டில் செய்து கொடுக்கக் கூடிய உணவுகளை கொடுப்பதை வழக்கமாக வைக்கவேண்டும்.

தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு பிடித்தமான சத்தான கொண்டை கடலை சுண்டல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • முளைகட்டிய – கொண்டைக்கடலை ஒரு கப்
  • கடுகு – அரை தேக்கரண்டி
  • சீரகம் – அரை தேக்கரண்டி
  • இஞ்சி – சிறு துண்டு
  • பச்சை மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • சாம்பார் பொடி – அரை தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • கடலைப்பருப்பு, உளுந்து – தாளிக்க தேவையான அளவு

செய்முறை

முதலில் முளைகட்டிய கொண்டைக் கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவேண்டும். பின் இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதனுடன் நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவேண்டும். வதக்கியவுடன் வேக வைத்த கடலையை சேர்த்து கிளறவேண்டும். இறக்கும்போது சாம்பார் பொடி தூவி நன்கு கிளறி இறக்க வேண்டும். இப்பொழுது சுவையான கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்