venthaya kanji
வெந்தய கஞ்சி– கசப்பு இல்லாமல் வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
வெந்தயக் கஞ்சி உடல் சூட்டை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி, முடி கொட்டுதல் போன்றவற்றை தடுக்கும். இந்த கஞ்சியை கோடை காலங்களிலும், பெண்கள் மாதவிடாய் நேரங்களிலும் செய்து குடித்து வரலாம்.
இந்த கஞ்சியை காலை நேரத்தில் குடிப்பது சிறந்ததாகும் மேலும் மாலை நேரத்தில் குடிப்பதால் உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தி சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது.
வெந்தயம் மற்றும் அரிசியை கழுவி இரவே தனித்தனியாக ஊறவைத்து விட வேண்டும். அப்போது தான் கசப்பு தன்மை போகும். காலையில் ஊற வைத்த அரிசி தண்ணீரை சிறிது எடுத்து விட்டு அதை மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் அதிலேயே வெந்தயத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அதை ஒரு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடாக்கி அதில் இந்த அரிசி வெந்தயத்தை சேர்த்து உப்பு சிறிது சேர்த்து பத்து நிமிடம் கிளறி வேக விடவும்.
வெந்த பிறகு அதில் உங்கள் சுவைக்கு ஏற்ப வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து விடவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு காய்ச்சிய பாலை அதனுடன் சேர்த்து கலக்கவும். இப்போது வெந்தயக் கஞ்சி தயார். இதில் நீங்கள் தேங்காய் பால் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…