நம்மில் அதிகமானோர் தினமும் விதவிதமான குழம்புகளை வைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பொட்டுக்கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவேண்டும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நன்கு சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு பொரிய விட வேண்டும். பிறகு பச்சை மிளகாயை போட்டு 2 நிமிடம் வதக்கி வெங்காயத்தை சேர்த்து வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கி தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவேண்டும்.
தண்ணீர் ஓரளவு சுண்ட தொடங்கும்போது, பாத்திரத்தை இறக்கி வைத்து பொடித்து வைத்த பொட்டுக்கடலை மெதுவாக தூவி கட்டி இல்லாமல் கலக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி தூவிப் பரிமாற வேண்டும். இப்போது சுவையான பொட்டுக்கடலை குழம்பு தயார்.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…