சுவையான பருப்பு போண்டா செய்யும் முறை.
நாம் தினமும் மாலை நேரங்களில் தேநீருடன் ஏதாவது ஒரு இடை உணவை சாப்பிடுவது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான பருப்பு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாய் விதையை நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஊறிய கடலைப்பருப்புடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல், இரண்டு சுற்று அரைத்தெடுக்க வேண்டும். பின் அத்துடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.
பின் அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, பின் பருப்பு கலவையை எலுமிச்சை அளவு உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்போது சுவையான பருப்பு போண்டா தயார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…