சுவையான கறிவேப்பிலை தோசை செய்வது எப்படி?

Default Image

 நாம் தற்போது இந்த பதிவில் சுவையான கறிவேப்பிலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.  

தேவையானவை

  • பச்சை அரிசி – ஒன்றரை கப்
  • புழுங்கலரிசி – அரை கப்
  • பால் – அரை கப்
  • உளுந்து  – அரை கப்
  • துவரம் பருப்பு – ஒரு மேசை கரண்டி
  • வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – ஒன்றரை கப்
  • பச்சை மிளகாய் – நான்கு
  • சின்ன வெங்காயம் – 10
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஐந்து மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அரைப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு, அவலை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

5 மணி நேரத்திற்குப் பின் அரிசி பருப்பு கலவையை நைஸாக அரைக்க வேண்டும். பின் அவலுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து நைஸாக அரைத்து அரிசி மாவு கலவையுடன் சேர்த்து உப்பு போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மாவை 5 முதல் 6 மணி நேரம் வரை புளிக்க விடவேண்டும். மாவு புளித்த பின்பு தோசைக்கல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்க வேண்டும். இப்பொது சுவையான கறிவேப்பிலை தோசை தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்