ஒரு பெண்ணின் சுத்தத்தை, அந்த பெண்ணின் சமையலறை சுத்தத்தை வைத்து தான் கணிப்பார்கள். அதே போல் பெண்களும் தங்களது சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவர். நமது சமையலறை தூய்மையை காக்கவும், சமையல் பொருட்களின் சுத்தத்தை பேணி காக்கவும் நாம் பல வழிமுறைகளை கையாள்கிறோம். தற்போது இந்த பதிவில், நாம் அறிந்திராத சில சமையலறை டிப்ஸ் பற்றி பார்ப்போம்.
எண்ணெய் பாட்டில்
நமது சமையலறையில் எண்ணெய் பாட்டில் வைக்கும் இடம், பாட்டிலில் இருந்து ஆயில் கசிவதால், சற்று எண்ணெய் தன்மையுடன் காணப்படும். இதனை தடுக்க, நமது வீடுகளில் நாம் பயன்படுத்தாத சாக்ஸ் இருந்தால், அந்த சாக்ஸை நன்கு கழுவி காய வைத்து, ஆயில் பாட்டிலில் மாட்டி வைத்தால், எண்ணெய் கசியாது.
உருளைக்கிழங்குடன் வெங்காயம்
நாம் சந்தையில் காய்கறிகள் வாங்கி வரும் போது சில சமயங்களில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை ஒரே பையில் போடுவதுண்டு. அவ்வாறு சேர்த்து வைப்பதால், வெங்காயம், உருளைக்கிழங்கில் பூஞ்சைகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை தனித்தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
மிக்சி ஜார்
நாம் மிக்சி ஜாரை தினமும் பயன்படுத்துவதால், அந்த ஜாரின் கூர்மை மழுங்கி போயிருக்கும். அதனை கூர்மைபடுத்த, ஜாரில் கல் உப்பை போட்டுஅரைத்தால், மிக்சி ஜாரின் கத்தி கூர்மையாகும்.
பருப்பில் வண்டு
நமது வீடுகளில் பருப்பை நீண்ட நாட்கள் வைத்திருந்தால் வண்டு வரும். இதனை தடுக்க பருப்பை வாங்கி வந்தவுடன் ஒரு சட்டியில் போட்டு, நன்கு வறுத்து பின் ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நீண்ட நாட்கள் வண்டு வராமல் இருக்கும்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…