நாம் தொலைத்த நாகரீக முறைகள்…! நீடித்த வாழ்வை அளிக்கும் நீராகாரம்….!!!

Published by
லீனா

 

  • இன்று 65 வயது நெருங்கி விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
  • நல்ல பாகாடீரியாக்கள் நிறைந்த பழைய சோற்றில் உள்ள நீராகாரம் உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது.

முதியவர்களின் ஆயுள் காலம் நீடித்து இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நீராகாரம் தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல அமிர்தமாகும்.

Related imageஇன்றைய எந்திர மயமான உலகில், தொழிநுட்பத்தை வளர்ச்சிக்கேற்ப நோய்களும் பெருகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த விதவிதமான மருந்துகளை கண்டுபிடித்த போதிலும், அது நமக்கு பலன் கொடுப்பதில்லை.

 

முதியவர் பட்டம்

30 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று பார்த்தோம் என்றால் 80 அல்லது 90 வயது வரை மனிதனின் ஆயுட்காலம் இருந்தது. அக்காக்காலத்தில் 90 வயது முதியவர் கூட இளமை துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருந்தனர்.

ஆனால் இன்று 65 வயது நெருங்கி விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பழைய சோறு

நமது முன்னோர்கள் எல்லாரும் 90 வயது வரை திடகாத்திரத்தோடு வாழ்ந்தார்களே? அது எப்படி? அது அவர்களின் உணவு முறைகள் தான்.

பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரத்தை, நாம் வீணாக வெளியே கொட்டாமல், அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதனால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீரில், வைட்டமின் B6, B12 போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளது.

செரிமானம்

பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீரை தொடர்ந்து குடித்து வந்தால், அஜீரணம், வாந்தி, பித்த மயக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். நல்ல பாகாடீரியாக்கள் நிறைந்த இந்த உணவு உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது.

தேநீர்

பசியை தடை செய்யும் தேநீர்

தேநீர் நமது வாழ்வில் நன்கு கலந்து விட்ட ஒரு உணவு முறையாகும். ஒரு நாளைக்கு இரண்டு கப் தேநீருக்கு மேல் குடிக்கும் பொது பசி எடுப்பதே தெரியாமல் போய்விடுகிறது.

உடல் எடை அதிகரிப்பு

நமது உடல் எடை அதிகரிப்பதற்கு தேநீரும் ஒரு முக்கிய காரணமாகும். அதிகமாக தேநீர் குடிப்பதால் நமது உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் இதயக்கோளாறுகள், நரம்பு மண்டலா பாதிப்புகள், தூக்கம் கெடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.

செயற்கை பானங்கள்

நாம் என்று நமது நாகரீக உணவு முறையான, பழங்கஞ்சி தண்ணீரை குடிக்க மறந்தோமோ, அன்றே நமது ஆரோக்கியத்தை தொலைத்து விட்டோம். இன்றைய தலைமுறையினர் கைக்கு கிடைக்கும் பலவித பானங்களையும், எந்த வித பாதிப்புகளை ஏற்படுத்தும் என அறியாமல் அருந்தி வருகினறனர்.

இதையும் படிங்க….

 

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago