நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பல நற்செயல்களை வழக்கமாக்கி கொள்கிறோம். ஆனால், நம்மில் அதிகமானோருக்கு இருக்கும் ஒரு தீய பழக்கம் என்னவென்றால், அது காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்கும் பழக்கம். இந்த பழக்கம் நல்ல பழக்கமல்ல.
தற்போது நாம் இந்த பதிவில் காலையில் எழுந்தவுடன் என்னென்ன நீராகாரங்களை பருகினால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும் என்பது பற்றி பார்ப்போம்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிக சிறந்தது. சிலர் வெந்நீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால், குளிர்ந்த நீரை குடித்தால், நமது உடலில் உள்ள அசிட்டிக் தன்மையை குறைத்து நமது உடலை குளிர்ச்சியாக்குகிறது.
வெந்தயத்தை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, காலையில் அந்த தண்ணீரை பருகி வந்தால், நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, உடலை குளிர்ச்சியாக்குகிறது.
காலையில் எழுந்தவுடன் அருகம்புல் சாறு குடிப்பது மிகவும் நல்லது. இந்த சாற்றினை குடித்தால், வயிற்றுப்புண் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மேலும் இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
வெள்ளைப்பூசணி சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. மேலும், தொப்பை மற்றும் ஊளை சதையை குறைக்க விரும்புபவர்கள் இந்த சாற்றினை குடிப்பது மிகவும் நல்லது.
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சு தூணாக இருந்த ஒரு வீரர் என்றால்…
சென்னை : கடந்த வாரம் உச்சமடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வார தொடக்க நாளான நேற்று…
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…
சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…