கோடை காலத்தில் ஏற்படும் பக்கவாதமும்.. அதற்கான தீர்வுகளும் இதோ .!

Published by
K Palaniammal

Stroke-பக்கவாதம் ஏற்பட காரணம் அதற்கான முன் அறிகுறி மற்றும் அதற்கான உணவு முறை பற்றி இப்பதிவில் காணலாம்.

பக்கவாதம்:

மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த குழாய்களில் கசிவு அல்லது கட்டிகள் ஏற்படுவதால் பக்கவாதம் உண்டாகிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடுகிறது இதையே பக்கவாதம் என்கிறோம்.

காரணங்கள்:

உடலில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை உயரும்போது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது ,இதனால் உப்பு சத்து குறைபாடும் உண்டாகும் ,ஆகவே  மூளை பாதிப்படையும்.

இருதய நோய் உள்ளவர்கள், நுரையீரல் பிரச்சனை ,உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் ,பத்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது.

பக்கவாதம் வர முன் அறிகுறிகள்:

வாய் குளறுதல்,  பார்வை திறன் மங்குதல்,ரத்த அழுத்தம் அதிகமாகி தொடர் இருமல் இருக்கும்போதும்,  நடக்க முடியாமல் போவது மற்றும் ஒரு பகுதி மட்டும் செயலிழந்து காணப்படுவது.

சிகிச்சை முறை:

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை மூன்று மணி நேரத்திற்குள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு ரத்த கட்டிகளை கரைக்கும் மருந்துகள் கொடுக்கப்படும் மேலும் உயர் ரத்த அழுத்தத்தை. குறைப்பதற்கும் சிகிச்சை அளிக்கப்படும்.

பக்கவாதத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகள்:

பக்கவாதம் ஏற்பட முக்கிய காரணம் மன அழுத்தம், தூக்கமின்மை ,இவைதான் பெரும்பாலும் மற்ற நோய்களுக்கும்  முதன்மை காரணமாக இருக்கிறது. மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கார்டிசோல்  ஹார்மோனை குறைப்பதற்கு நல்ல தூக்கம் அவசியமானது.

மேலும்  இந்த பக்கவாதம், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு வேலையை செய்து முடித்தே ஆக வேண்டும் என்று வேலை செய்பவர்களுக்கு வர அதிக சாத்திய கூறு உள்ளது என ஆராய்ச்சி கூறுகிறது. அவ்வாறு செயல்படுவதை தவிர்க்கவும் .

உணவு முறை:

கோடை காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள இளநீர், மோர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும் ,இதனால் நீரிழப்பு ஏற்படாமல் தடுத்து உப்புச்சத்து குறைபாட்டில் இருந்தும் பாதுகாக்கப்படும்.

ஆளி விதை

ஆளி விதையில் லிட்னன்ஸ் இருப்பதால் இது ஸ்ட்ரோக் வராமல் பாதுகாக்கும், தினமும் 5 கிராம் அளவு பொடியாக்கி ,சாப்பிடும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளவும்.

மாதுளை

மாதுளையில் நைட்ரிக் ஆக்சைடு மூளையில் நைட்ரிக் ஆக்ஸைடு குறைபாடை சரி செய்து பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

கருப்பு பீன்ஸ்

கருப்பு பீன்ஸில்  மெக்னீசியம் அதிகம் உள்ளது இந்த மெக்னீசியம் ஸ்ட்ரோக் ஏற்படுவதை தடுக்கும்.

தக்காளி

தக்காளியில் லைகோபின் இருப்பதால் பக்கவாதம் ஏற்படுவது தடுக்கப்பட்டு மீண்டும் வராமல் பாதுகாக்கப்படுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

இனிப்பு வகைகள், பாமாயில் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றை தவிர்த்தால் பக்கவாதம் திரும்ப வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மேலும் உடற்பயிற்சி, பிசியோதெரபி போன்றவற்றை தினமும் செய்து வர வேண்டும்.

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

7 mins ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

4 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

5 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

5 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

5 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

5 hours ago