ஆரோக்கியம்

Pregnant Women : கர்ப்பிணி பெண்கள் பாயில் படுப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?

Published by
லீனா

கர்ப்பமாக இருக்கும் பெண்களின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தான், வயிற்றில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் சீரான முறையில் பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும்.

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் பிரசவம் என்பது இயற்கையான முறையில் தான் நடந்தது. ஆனால் இன்று பெரும்பாலானோருக்கு அறுவை சிகிச்சை முறையில் தான் நடைபெறுகிறது. இதற்கு நமது கற்ப காலங்களில் நம்முடைய நடைமுறைகள் ஒரு காரணமாக இருக்கிறது.

நமது முன்னோர்களின் காலத்தில் இன்று காணப்படக் கூடிய சொகுசு வாழ்க்கை இருக்கவில்லை. காலை முதல் இரவு உறக்கத்திற்கு செல்லும் வரை, கடினமான கஷ்டத்தோடு வேலை செய்வதுண்டு. ஆனால் இன்று, சமைப்பது, துணி துவைப்பது என அனைத்துமே எந்திரமயமாக்கப்பட்டு விட்டது. நமது உடலுக்கு வேலை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அதேபோல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டியதும் மிகவும் அவசியம்.

தற்போது இந்த பதிவில் கர்ப்பிணி பெண்கள் பாயில் படுத்து உறங்குவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம்.

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு 

பாயில் படுத்து உறங்குவது உடலுக்கு குளிர்ச்சியானது. எனவே கர்ப்பிணி பெண்களின் உடல் எப்போதும் அதிகமான சூடாக இருப்பது நல்லதல்ல. எனவே, உடல் வெப்பம் அதிகமாக உள்ள கர்ப்பிணி பெண்கள், பாயில் படுத்து உறங்கினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

அதேபோல் பாயில் படுத்து உறங்குவதால் கர்ப்பிணி பெண்களின் இடுப்பெலும்பு விரிவடையும். இதனால், சுக பிரசவம் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மேலும், கர்ப்பிணி பெண்கள் பாயில் படுப்பதால் முதுகுவலி, இடுப்புவலி, தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகள் வராது. அதே போல் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்லாது,  பிறந்த குழந்தைகளையும் பாயில் படுக்க வைப்பது நல்லது.

பிறந்த குழந்தைகளை பாயில் படுக்க வைப்பதால், குழந்தைகளின் முதுகெலும்பு சீராவதுடன், கழுத்து சுளுக்கு பிடிக்காது. இப்படி குழந்தைகளை பாயில் படுக்க வைப்பதால், அவர்கள் வேகமாக வளர்வதுடன், குழந்தைகளின் உடலில் உள்ள சூட்டை தணிக்கவும் உதவுகிறது. எனவே, இந்த நடைமுறையை கடைபிடிப்பது தாய், சேய் இருவரின் நல்லது.

Published by
லீனா

Recent Posts

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

54 minutes ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

1 hour ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

2 hours ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

3 hours ago

வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…

3 hours ago

இனிமே நான் இந்தியா ரசிகன்…பாகிஸ்தான் ரசிகரின் அதிர்ச்சி செயல்..வைரலாகும் வீடியோ!

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…

3 hours ago