White discharge-வெள்ளைப் படுதலுக்காக நம் முன்னோர்கள் கூறிய வீட்டு மருத்துவங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
உடல் சூடு, கழிப்பறை சுத்தம் இல்லாமல் இருப்பது, உள் ஆடைகள் சுத்தம் இல்லாமல் அணிவது ,தவறான உணவு பழக்க வழக்கம் ,மனக்கவலை ,தூக்கமின்மை ,சுகாதாரம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றால் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது.
இந்த வெள்ளைப்படுதல் 13 இல் இருந்து 45 வயது இருக்கும் பெண்களுக்கு ஏற்படும். இதனால் முதுகு வலி ,உடல் வலி, ரத்த சோகை , எவ்வளவு அதிகமாக உணவு எடுத்துக் கொண்டாலும் ஒல்லியாகவே இருப்பது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அது மட்டுமல்லாமல் இதை ஆரம்ப காலத்திலேயே தடுக்காவிட்டால் பிற்காலத்தில் கருத்தரிப்பதில் தாமதம் அல்லது கருத்தரிக்க முடியாமல் போவது போன்ற கருப்பை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
சோற்றுக் கற்றாழையில் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து ஆறு முறைக்கு மேல் நீரில் கழுவி அதை மோரில் கலந்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளவும்.
இளநீரில் ஒரிஜினல் சந்தனத்தை உரசி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதை இளநீரில் கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு வெறும் வயிற்றில் குடித்து வரவும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வரலாம்.
மேலும் உளுந்து 100 கிராம் ,பார்லி 100 கிராம் இவற்றை ஊற வைத்து சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஞ்சி ஆகவும் செய்து குடித்து வரவும்.
அது மட்டுமல்லாமல் சுக்கான் கீரையை தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தாலும் வெள்ளைப்படுதல் நின்று விடும். சப்ஜா விதைகளை ஊறவைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம். ஜவ்வரிசியை பாலில் வேக வைத்து குடித்து வரலாம்.
மேலும் உணவுக்குப் பின் மதிய வேலைகளில் மோர் அருந்துவது நல்லது .அது மட்டுமல்லாமல் மாதத்திற்கு ஒருமுறை கைகளில் மருதாணி வைத்துக் கொள்வது, உடல் வெப்பம் குறைந்து குளிர்ச்சி பெறக்கூடிய உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வது, வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் வைத்து குளிப்பது போன்றவற்றையும் செய்து வர வேண்டும்.
கத்தரிக்காய் வெள்ளைப்படுதல் இருக்கும்போது எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் மசாலா உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
பொதுவாகவே ஒல்லியாக இருப்பவர்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும். இந்தப் பிரச்சனை இருந்தாலும் ஒல்லியாகவே இருப்பார்கள் .அதனால் இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் இந்த எளிமையான மருத்துவ குறிப்புகளை பயன்படுத்தி பலனடையுங்கள்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…