பாகற்காய் என்றாலே கசப்பு என்று தான் அனைவரும் எண்ணுவதுண்டு. ஆனால் இந்த கசப்பு நிறைந்த பாகற்காயை ஜூஸ் செய்து குடிப்பதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட விரும்பாதவர்கள் பாகற்காயை ஜூஸ்ஸாக செய்து குடிக்கலாம். வீட்டில் இருந்தபடியே சுலபமாக பாகற்காய் ஜூஸ் செய்வது எப்படி என்று பாப்போம்.
பாகற்காய் – 200 கிராம்
மிளகு – 8
சீரகம் 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
பாகற்காய் ஜூஸ் செய்வதற்கு முதலில் பாகற்காயை நன்றாக கழுவி விட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய பாகற்காய் துண்டுகளை மிக்சியில் போட்டு, அதனுடன் மிளகு, சீரகம், உப்பு தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நுரை வருமளவிற்கு நன்கு மிக்சியில் அடிக்க வேண்டும்.
பிறகு நன்கு அரைத்த பாகற்காய் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்க வேண்டும். இப்பொது நமது உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழித்து, ஆரோக்கியத்தை தரக்கூடிய பாகற்காய் ஜூஸ் ரெடி.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…