கைவிரல் சொடக்கு எடுப்பது சரியா? தவறா? இதோ அதற்கான தீர்வு..!

Published by
K Palaniammal

Chennai- நம்மில் சிலர் சலிப்பாக இருந்தாலோ அல்லது டென்ஷனாக இருந்தாலோ  புத்துணர்ச்சிக்காக சொடக்கு எடுக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருப்போம்.. இப்படி சொடக்கு எடுப்பதால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்றும்  சொடக்கு எடுக்கும்போது ஏற்படும் சத்தம் எங்கிருந்து வருகிறது என  சந்தேகம் நமக்கு இருக்கும்.

நாம் சுலபமாக மடக்க கூடிய  மூட்டுகள் என்றால் அது கை விரல்கள் தான். கை மட்டும் அல்லாமல் நம்மில்  பலரும் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் நெட்டை எடுக்கும் பழக்கம் இருக்கும். குறிப்பாக இந்த பழக்கம் ஒரே இடத்தில் வேலை செய்பவர்களுக்கு அதிகமாக இருக்கும். சொடக்கு எடுத்தல் என்பதை நெட்டை எடுத்தல் என்றும் சிலர் கூறுவார்கள்.. அப்படி சொடக்கு போடும்போது ஒரு சத்தம் வரும். இது விரல் மூட்டுகளில் உருவாகுவது ஆகும் .அதாவது விரல் மூட்டுகளுக்கு இடையே சைனோவியல் ஃப்ளூயிட்  என்ற திரவம் இருக்கும் .இது நைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு சேர்ந்த திரவமாகும். இந்தக் காற்று குமிழிகள் நெட்டை எடுக்கும் போது வெளியேற்றப்படும். அதுதான் சத்தமாக நமக்கு கேட்கும்.

இந்த திரவம் மீண்டும் உருவாக அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் தான் நாம் திரும்ப நெட்டை எடுக்கும் பொழுது சத்தம் வருவதில்லை.  . இதனால் டென்ஷனோ  அல்லது சலிப்போ  குறையும் என்று எந்த ஒரு ஆராய்ச்சிகளும் குறிப்பிடவில்லை ஆனால் சைக்காலஜியின் படி   நல்ல புத்துணர்ச்சியான மனநிலையை ஏற்படுத்துகிறது என ஆய்வு கூறுகிறது.

நெட்டை எடுப்பதால் ஆபத்துகள் ஏற்படுமா?

இதைப் பற்றி பல ஆண்டுகளாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதன்படி ஆய்வின் முடிவில் நெட்டை எடுப்பதால்  எந்த ஆபத்தும் இல்லை என்றும், ஒரு சில ஆய்வுகளில் அடிக்கடி நெட்டை எடுத்தால் தான்  கை வீக்கம், தசைநார் பாதிப்பு போன்ற சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று  கூறுகிறது.

அது மட்டுமல்லாமல் கழுத்து பகுதியில் சொடக்கு எடுப்பதை தவிர்ப்பது நல்லது .ஏனென்றால் நம் கழுத்து பகுதியில் தான் தண்டுவடம் உள்ளது. அதை சுற்றி நம் கை கால்களுக்குச் செல்லும் நரம்புகள் இருக்கும். அடிக்கடி கழுத்தை திருப்புவதால் தண்டுவட நரம்புகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் சொடக்கு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதில் புத்துணர்ச்சிக்காக கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில்   மசாஜ் செய்து கொள்வது தான் சிறந்தது.

Recent Posts

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

6 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

31 minutes ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

50 minutes ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

54 minutes ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

1 hour ago

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

3 hours ago