நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகை டீ.
இன்று நம்மை அச்சுறுத்தும் கொள்ளை நோய்கள் கண்டு நாம் பயப்படாமல் இருக்க, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்பட வேண்டும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் மற்றும் பாணங்களை அருந்துவதன் மூலம், நம்மை தீய வைரஸ் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
தற்போது இந்த பதிவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மூலிகை டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிய இஞ்சி துண்டை எடுத்து தோல் சீவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 3 கிராம்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் இஞ்சி மற்றும் கிராம்பு இரண்டையும் அம்மியில் வைத்து நன்கு நசுக்கிக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் அளவு தண்ணீர் சேர்த்து அதனுள், நாம் அரைத்து வைத்துள்ள இஞ்சி மற்றும் கிராம்பு இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுள் 10 துளசி இலைகளை சேர்த்து கொண்டு, தண்ணீர் கொதித்தவுடன் சிறிதளவு பட்டை பொடியை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி டீயை ஆறவைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். இந்த டீயை தொடர்ந்து 4 நாட்கள் இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால், உடலில் உள்ள கிருமிகள் அளிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி
கிராம்பு
துளசிஇலை
பட்டைப்பொடி
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…