முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் நாம் அனைவரும் உண்ண கூடிய ஒரு பழம் தான். இந்த பழத்தை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு பழம்.
தற்போது, இந்த பதிவில் பலாப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
பலாப்பழத்தில் புற்றுநோயை தடுக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டு ஆகிய அமில சத்துக்கள், நமது உடலில் புற்றுநோய் கிருமிகள் உருவாகாமல் தடுத்து, நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பலாப்பழம் இரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பலாப்பழத்தில் பொட்டாசிய சத்து அதிகமாக இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரித்து, இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை குணமாக்குகிறது.
பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண் சம்பந்தமான பிரச்சனையை நீக்க கூடியது. இந்த பழத்தில் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக உள்ளது. அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கிறது.
ஆஸ்துமா நோயினால் அவதிப்படுபவர்கள், இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயில் இருந்து விடுதலை பெறலாம்.
பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…