காற்று மாசு சிறுநீரகத்தை பாதிக்குமா...?

மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் முக்கியமான உறுப்புகள் தான். இவற்றில் உடலுக்கு தேவையான இரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் எந்த நோயும் அணுகாமல்

மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் முக்கியமான உறுப்புகள் தான். இவற்றில் உடலுக்கு தேவையான இரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் எந்த நோயும் அணுகாமல் பாதுகாப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இன்றைய நவீனமயமான காலத்தில், மருத்துவர்களால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நோய்கள் உருவாகி வருகிறது.

உடல் உறுப்புகள் செயலிழப்பு :

இன்று அதிகரித்துவிட்ட வாகனங்களில் இருந்து, அளவுக்கு அதிகமாக நச்சுப்புகை வெளியேற்றப்படுகிறது.  இந்தப் புகையின் மூலமாக காற்று சிறிதுசிறிதாக மாசுபடத் தொடங்குகிறது. புகையில் வெளிப்படுகிற நச்சுத்தன்மை கொண்ட உலோகப் பொருட்கள், லெட், காட்மியம் போன்ற தாதுக்கள் நமது உடலுக்குள் செல்வதால், நுரையீரல் உட்பட எல்லா உறுப்புகளும் செயல் இழக்கத் தொடங்குகின்றன.

unknown node

மேலும், மாசடைந்த காற்றினைச் சுவாசிப்பதால், மூச்சுத்திணறல் போன்ற சுவாசக்கோளாறுகள் ஏற்படுவதோடு, குறைப்பிரசவம், சர்க்கரை நோய் போன்றவையும் நேரிடலாம்.நுரையீரலுக்குள் செல்கிற விஷத்தன்மை உடைய உலோகப் பொருட்கள், தாதுக்கள் ரத்தத்தில் கலந்து, சிறுநீரகங்களுக்குள் செல்கின்றன. இதன் காரணமாக, நச்சுத்தன்மை கொண்ட சிறுநீரக நோய் ஏற்படுகிறது. சிறுநீரை வடிகட்டி, வெளியேற்றுகிற நெப்ரான்கள் பாதிப்பு அடைகிறது.

காற்று மாசு :

unknown node

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடல்ரீதியாக, என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ அவை அனைத்தும் காற்று மாசுபடுவதாலும் உண்டாகும். மரங்களில் இருந்து வெளிப்படுகிற கார்பன் டை ஆக்சைடு, காற்றில் மிதக்கும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள் போன்றவற்றை சுவாசிப்பதால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதுமைப் பருவத்தினர் போன்றோர்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

குறைந்த வயதில் மரணம் :

unknown node

நீண்ட கால பிரச்னை என பார்க்கும்போது 75 வயதில் நேரிடுகிற இறப்பு முன்கூட்டியே 55  வயதிலேயே வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காற்று மாசினால் ஏற்படுகிற உடல்நலக் குறைபாட்டினைத் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன. ஒருவருக்கு என்ன மாதிரியான பாதிப்பு வந்துள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

உலக சுகாதார மையம் தருகிற புள்ளி விபரத்தின் அடிப்படையில், ஓர் ஆண்டில் 4.2 மில்லியன் பேர் காற்று மாசுபாட்டினால் பாதிப்பு அடைவதாக தெரிய வருகிறது.