நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்.
நம்மில் பலரும் பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி காலையில் எழுந்தவுடன் பரபரப்பாக வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு, அலுவலக வேலைகளை நோக்கி செல்வதுண்டு. இதனால் நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
மாதுளை பழம் அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த ஒரு பழமாகும். இதனை பழமாக எடுப்பதைவிட, மாதுளை பிஞ்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அந்த மாதுளை பிஞ்சை எடுத்து, நன்கு தண்ணீரில் கழுவி, பின்பு மேல் தோலுடன் சேர்த்து அதனை நன்கு மென்று சாப்பிட்டால் போதும். இதனை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் குடல் புண் விரைவில் ஆறிவிடும். மாதுளை பழத்தை பழமாக அல்லது பழ சாறாக உட்கொள்ளலாம்.
சப்போட்டா பழம் வயிற்று புண்களை ஆற்றக் கூடிய ஒரு அற்புதமான பழமாகும். இதனை காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையில் சாப்பிட வேண்டும் அல்லது மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடைப்பட்ட இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்.
அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…
திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…
கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…
சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…