மோரை இந்த மாதிரி செஞ்சு குடிச்சா இவ்வளவு பயன்களா?

Published by
பால முருகன்

Buttermilk : மோர் குடிப்பதால் நம்மளுடைய உடலில் ஏற்படும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோடை வெப்பத்தில் இருந்து நாம் நம்மளுடைய உடலை பாதுகாக்க மோர் குடிப்பது மிகவும் நல்லது. இருந்தாலும் கடைகளில் மோர் வாங்கி குடிப்பதை தவிர்த்துவிட்டு நாங்கள் உங்களுக்காக சொல்லும் டிப்ஸ் படி மோர் செய்து குடித்தால் பல விதமான நன்மைகள் கிடைக்கும். எப்படி அந்த மோரை செய்வது அதில் இருந்து கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

மோர் அசத்தலாக செய்யும் முறை

முதலில் பண்ணைக்கு சென்று சுத்தமான தயிரை தேவையான அளவிற்கு வாங்கி கொள்ளுங்கள். வாங்கிய பிறகு தேவையான அளவிற்கு அந்த தயிரில் தண்ணீரை கலந்துகொள்ளவேண்டும். மத்தயை வைத்து கடைந்தால் இன்னுமே நல்லது. பிறகு ஒரு அளவுக்கு நீர் பதத்திற்கு வந்த பிறகு மல்லி இளை, இஞ்சி (2 துண்டுகள்) , உப்பு (தேவையான அளவு) ஆகியவை மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி கூல் பதத்திற்கு அரைத்து கொள்ளவேண்டும். இன்னும் ஆரோக்கியமாக இருக்கா அம்மியில் வைத்து கூட அரைத்து எடுத்துக்கொள்ளலாம்.

பிறகு தயிருடன் கலந்து வைத்து இருக்கும் மோரில் நீங்கள் அரைத்து வைத்த அந்த கூழை சேர்த்துக்கொள்ளவேண்டும். பிறகு வேண்டும் என்பவர்கள் வெங்காயம், மிளகாய் சேர்த்து கொள்ளலாம். இதெல்லாம் சேர்த்த பிறகு அசத்தலான குளு குளு ஆரோக்கியமான மோர் ரெடி.

நன்மைகள்

இப்படியான மோரை இந்த வெயில் காலத்தில் குடிப்பதால் நமக்கு உடலுக்கு தேவையான குளிர்ச்சி கிடைக்கிறது. இந்த மோரில் மல்லி இளை, இஞ்சி ஆகியவை சேர்த்துள்ள காரணத்தால் சளி, இருமல்,  போன்ற பிரச்சனைகள் வராது. இந்த கோடை காலத்தில் அதிகமானோருக்கு வயிற்றுபோக்கு ஏற்படும் அவர்கள் இந்த மோரை குடித்தால் அவர்களுக்கு வயிற்றுபோக்கு பிரச்சனை ஏற்படாது.

அதைப்போல சிலருக்கு வெயில் நேரத்தில் வாய் மற்றும் உடலில் வறட்சி பிரச்சனை இருக்கும். அவர்கள் இப்படி மோரை செஞ்சு தினமும் பருகலாம். தினமும் மோர் குடிப்பதன் மூலம் நம்மளுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதைப்போல, பலவிதமான தொற்று நோய்களில் இருந்து நம்மளை பாதுகாக்கிறது. மோரில் குறைந்த கலோரி மட்டுமே இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மோரை தினமும் குடிக்கலாம்.

குடிக்கவேண்டிய நேரங்கள்

மோர் குடிக்க சரியான நேரம் என்றால் காலையில் 10 மணி அளவில் குடிக்கலாம். அதைப்போல மத்தியான நேரத்தில் குடிக்கலாம் சாப்பிட பிறகு ஒரு கிளாஸ் குடித்தால் மிகவும் நல்லது. மாலை நேரங்களிலும் கூட குடிக்கலாம். ஆனால், இரவு நேரங்களில் குடிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Published by
பால முருகன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

13 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago