மோரை இந்த மாதிரி செஞ்சு குடிச்சா இவ்வளவு பயன்களா?

Published by
பால முருகன்

Buttermilk : மோர் குடிப்பதால் நம்மளுடைய உடலில் ஏற்படும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோடை வெப்பத்தில் இருந்து நாம் நம்மளுடைய உடலை பாதுகாக்க மோர் குடிப்பது மிகவும் நல்லது. இருந்தாலும் கடைகளில் மோர் வாங்கி குடிப்பதை தவிர்த்துவிட்டு நாங்கள் உங்களுக்காக சொல்லும் டிப்ஸ் படி மோர் செய்து குடித்தால் பல விதமான நன்மைகள் கிடைக்கும். எப்படி அந்த மோரை செய்வது அதில் இருந்து கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

மோர் அசத்தலாக செய்யும் முறை

முதலில் பண்ணைக்கு சென்று சுத்தமான தயிரை தேவையான அளவிற்கு வாங்கி கொள்ளுங்கள். வாங்கிய பிறகு தேவையான அளவிற்கு அந்த தயிரில் தண்ணீரை கலந்துகொள்ளவேண்டும். மத்தயை வைத்து கடைந்தால் இன்னுமே நல்லது. பிறகு ஒரு அளவுக்கு நீர் பதத்திற்கு வந்த பிறகு மல்லி இளை, இஞ்சி (2 துண்டுகள்) , உப்பு (தேவையான அளவு) ஆகியவை மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி கூல் பதத்திற்கு அரைத்து கொள்ளவேண்டும். இன்னும் ஆரோக்கியமாக இருக்கா அம்மியில் வைத்து கூட அரைத்து எடுத்துக்கொள்ளலாம்.

பிறகு தயிருடன் கலந்து வைத்து இருக்கும் மோரில் நீங்கள் அரைத்து வைத்த அந்த கூழை சேர்த்துக்கொள்ளவேண்டும். பிறகு வேண்டும் என்பவர்கள் வெங்காயம், மிளகாய் சேர்த்து கொள்ளலாம். இதெல்லாம் சேர்த்த பிறகு அசத்தலான குளு குளு ஆரோக்கியமான மோர் ரெடி.

நன்மைகள்

இப்படியான மோரை இந்த வெயில் காலத்தில் குடிப்பதால் நமக்கு உடலுக்கு தேவையான குளிர்ச்சி கிடைக்கிறது. இந்த மோரில் மல்லி இளை, இஞ்சி ஆகியவை சேர்த்துள்ள காரணத்தால் சளி, இருமல்,  போன்ற பிரச்சனைகள் வராது. இந்த கோடை காலத்தில் அதிகமானோருக்கு வயிற்றுபோக்கு ஏற்படும் அவர்கள் இந்த மோரை குடித்தால் அவர்களுக்கு வயிற்றுபோக்கு பிரச்சனை ஏற்படாது.

அதைப்போல சிலருக்கு வெயில் நேரத்தில் வாய் மற்றும் உடலில் வறட்சி பிரச்சனை இருக்கும். அவர்கள் இப்படி மோரை செஞ்சு தினமும் பருகலாம். தினமும் மோர் குடிப்பதன் மூலம் நம்மளுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதைப்போல, பலவிதமான தொற்று நோய்களில் இருந்து நம்மளை பாதுகாக்கிறது. மோரில் குறைந்த கலோரி மட்டுமே இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மோரை தினமும் குடிக்கலாம்.

குடிக்கவேண்டிய நேரங்கள்

மோர் குடிக்க சரியான நேரம் என்றால் காலையில் 10 மணி அளவில் குடிக்கலாம். அதைப்போல மத்தியான நேரத்தில் குடிக்கலாம் சாப்பிட பிறகு ஒரு கிளாஸ் குடித்தால் மிகவும் நல்லது. மாலை நேரங்களிலும் கூட குடிக்கலாம். ஆனால், இரவு நேரங்களில் குடிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Published by
பால முருகன்

Recent Posts

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

2 minutes ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

1 hour ago

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…

2 hours ago

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

2 hours ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

3 hours ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

3 hours ago