watermelon [file image]
Watermelon : தர்பூசணி பழத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் வரும் பிரச்சனைகள் என்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தர்பூசணி பழத்தை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது என்று சொல்லலாம். கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே இந்த பழத்தை பலரும் வாங்கி விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே இந்த பழத்தில் அதிக அளவு நீர்சத்து இருக்கிறது என்பதால் தான். வெயில் காலத்தில் நாம் குளிர்ச்சியாக இருக்கவேண்டும் என்று இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறோம். எனவே, தர்பூசணி கோடை காலத்தில் முக்கிய பழமாக இருந்து வருகிறது.
இருந்தாலும், கோடை காலம் தொடங்கிவிட்டது தர்பூசணி பழம் அதிகமாக சாப்பிடலாம் என்று சிலர் சாப்பிடுவார்கள். ஆனால், தர்பூசணி பழத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டாலும் நம்மளுடைய உடலுக்கு சில பிரச்சனைகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்களே கூறுகிறார்கள். தர்பூசணி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.
தர்பூசணி பழத்தில் இயற்கையாகவே இனிப்பு உள்ளது எனவே, நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சாப்பிடுவது நல்லது அல்ல. அதைப்போல சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் கூட குறிப்பிட்ட அளவு சாப்பிட்டுவிட்டு இருப்பது நல்லது. அதிக அளவு எடுத்தால் இன்னுமே சைனஸ் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது.
தர்பூசணி பழத்தை எந்தெந்த நேரங்களில் நாம் சாப்பிடலாம் என்ற குழப்பம் நம்மளுடைய மனதில் இருக்கும். தர்பூசணியை காலை உணவின் போது எடுத்துக்கொண்டால் நல்லது தான். அதைப்போல, மதியம் சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக்கொள்ளலாம். மாலை நேரங்களில் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இரவு நேரங்களில் எடுத்துக்கொள்வதை மட்டும் தவிர்க்கலாம்.
தர்பூசணி பழத்தில் 96% வரை நீர் சத்து இருக்கிறது. இதன் மூலம் நமது உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கிறது. அதைப்போல, நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. தர்பூசணி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் இருக்கிறது. இது உங்கள் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…