மாத்திரைகளை இரண்டாக உடைத்து உட்கொள்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!

Published by
லீனா

இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கையே மாத்திரைகளில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மாத்திரையை  இரண்டாக உடைத்து சாப்பிடுவது சரியா? தவறா? 

இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கையே மாத்திரைகளில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் உடல் உபாதைகளுக்காக நாம் மருத்துவமனைக்கு செல்லும்போது மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். இந்நிலையில் இந்த மாத்திரைகள் சற்று பெரிதாக காணப்படும் போது அதை இரண்டாக உடைத்து அதை எடுத்துக் கொள்கிறோம். அவ்வாறு மாத்திரையை  இரண்டாக உடைத்து சாப்பிடுவது சரியா? தவறா? என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

மாத்திரைகளை இரண்டாக உடைத்து அதனை சாப்பிடுவது மிகவும் தவறான ஒரு செயல் ஆகும். முழுமையாக உட்கொள்வது தான் நமது உடலுக்கு நல்லது. ஏனென்றால், மாத்திரைகள் இரண்டாக உடைக்கும் போது சில சமயங்களில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய டோசேஜ் அளவு மாறுபடக்கூடும். இதனால் நமது உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. மருத்துவரிடம் மாத்திரைகளை இரண்டாக உடைக்கலாமா? என்று கேட்டு உறுதி செய்து கொள்வதும் நமக்கு நல்லது.

மாத்திரைகளை  உடைக்கும் போது அவற்றின் அளவு வேறுபடுகிறது. இவ்வாறு தவறான அளவில் உட்கொள்வதன் மூலம் நமது உடலில் மேலும் பல உபாதைகள் ஏற்பட நேரிடலாம்.  உயர் இரத்த அழுத்தம், கை கால் நடுக்கம், ஆர்த்ரைடிஸ், இதய நோயாளிகள் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு மாத்திரையும் தயாரிக்கப்படும் போது அதில் சேர்க்கக்கூடிய மூலப் பொருட்களின் அளவு வேறுபட்டு காணப்படும்.

நாம் மாத்திரை இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் உடைபடும்  என்றும், அதில் இருக்கும் மூலப்பொருட்கள் சமமாக பிரிந்து இருக்கிறது என்றும் நாம் நினைக்க முடியாது. வீரியமிக்க மருந்துகள் வயிற்றில் பிரச்சினை ஏற்படுத்தாமல் இருக்க கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். எனவே இவ்வகை மாத்திரைகளை முழுமையாகச் சாப்பிட்டால்தான் அந்த மாத்திரையால் நமக்கு நன்மை கிடைக்கும்.

அவ்வாறு சாப்பிடும் போது நாம் எந்த நோய்க்காக இந்த மாத்திரை எடுத்துக் கொள்கிறோமோ, அந்த நோய்க்கான தீர்வு கிடைக்காது. அதேசமயம் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறு மாத்திரைகளை உடைத்து சாப்பிடுவதை தவிர்ப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Published by
லீனா
Tags: tabletTips

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

13 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

13 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

14 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

15 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

15 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

18 hours ago