தொப்புளில் இரண்டு சொட்டு எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Published by
K Palaniammal

Oil benefits -தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன  நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தினமும் தூங்குவதற்கு முன் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். ஒவ்வொரு எண்ணெய்களுக்கும்  ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளது. தினமும் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஏதேனும் ஒரு எண்ணெயை  இரண்டு சொட்டு வீதம் தொப்புளில் விட்டு மசாஜ் செய்து தூங்கினால் பல்வேறு நன்மைகளை நம்மால் பெற முடியும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்:

நம்முடைய தொப்புள் பகுதியில் பின்புறம் பலவித நரம்புகள் பிணைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் ஒரு மைய புள்ளியாகவும் உள்ளது.

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி இருமல் போன்ற தொந்தரவு ஏற்படாமல் தடுக்க முடியும், ஒரு சிலருக்கு உதடு மற்றும் பாதத்தில் வெடிப்புகள் புண்கள் இருக்கும் அவர்கள் தினமும் தொப்புளில் எண்ணெய் வைத்தாலே போதும்.

மேலும் கண்பார்வை திறன் அதிகரிப்பு, மாலைக்கண் நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பிற்காலத்தில் புரை  ஏற்படுவதையும் தடுக்கிறது. ரத்தத்தை  தூய்மையாக்குகிறது, முகப்பொலிவை அதிகரிக்கிறது.

உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உஷ்ணத்தால் ஏற்படும் தலைமுடி உதிர்வு ஏற்படுவதையும் குறைகிறது. மேலும் நரம்புகளை பலப்படுத்துகிறது.

எந்த எண்ணெய் தேய்த்தால் என்ன பலன் தெரியுமா?

நல்லெண்ணெய் 

பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி மற்றும் கருப்பை கட்டிகள் பாதிப்புகளின் தீவிரம் குறையும் ,ரத்த ஓட்டத்தை சீராக்கும்.உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாகும் .

விளக்கெண்ணெய்

மூட்டு வலி மற்றும் முழங்கால் வலி உள்ளவர்கள் விளக்கெண்ணையை தொப்புளில் பயன்படுத்தலாம். இது மன அழுத்தத்தையும் குறைக்கும் .ஆழ்ந்த தூக்கத்தையும் கொடுக்கும்.

வேப்ப எண்ணெய்

சரும பிரச்சனை உள்ளவர்கள் வேப்ப எண்ணையை தேய்த்துக் கொள்ளலாம். குறிப்பாக சொரியாசிஸ் ,எக்சிமா, சொரி, படை, அரிப்பு, தோல் வறட்சி போன்ற பிரச்சனைகளை தடுக்க கூடியது.

பாதாம் ஆயில்

பாதாம் ஆயிலை பயன்படுத்துவதால் சரும பொலிவு அதிகரித்து அழகு பெறலாம் , முகம் பளபளப்பை அதிகரிப்பது போன்ற பயன்களை கொடுக்கும்.

நெய்

நெய்யை தொப்புளில் பயன்படுத்துவதால் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கிறது, வாய்ப்புண் மற்றும் உதடு வெடிப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

கடுகு எண்ணெய்

குடல் அலர்ஜி உள்ளவர்கள் கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம் மேலும் செரிமான தொந்தரவு, மலச்சிக்கல் போன்றவற்றையும் குணப்படுத்தும். புளித்த ஏப்பம் வருபவர்கள் இந்த கடுகு எண்ணெயை பயன்படுத்துவதால் குணமாகும். மேலும் உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும்.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெய்  இருக்க வேண்டும் இதை நீங்கள் பயன்படுத்தும் போது தோல் வறட்சி குணமாகும். முகப்பொலிவு ஏற்படும் ,சளி இருமல் குறிப்பாக வறட்டு இருமல் ஏற்படுவது தடுக்கப்படும் .

உடல் உஷ்ணத்தை குறைக்கும்.பிறந்த குழந்தையின் தொப்புளின் புண் ஆறவும் சீல் பிடிக்காமல் இருக்கவும் இன்றும் தேங்காய் எண்ணெய் தான்  பயன்படுத்தப்படுகிறது .

இவ்வாறு தொப்புளில் எண்ணெய் தேய்த்து வருவதால் அதன் மருத்துவ நன்மைகளை பெறுவதோடு தொப்புளில் அழுக்கு அழுக்கு படிவதும் குறைக்கப்படுகிறது

இதுபோல் சிறிய சிறிய மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வந்தாலே பல நோய்கள் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் “வருமுன் காப்பதே சிறந்ததாகும்”.

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

11 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

11 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

14 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

14 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

15 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

16 hours ago