அடேங்கப்பா..மாம்பழத்தை விட மாம்பழ விதையில் தான் அதிக சத்து இருக்கா?

Published by
K Palaniammal

Mango seeds-மாம்பழத்தின் விதை பகுதியில் உள்ள நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம் .

மாம்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய பழம். இந்த மாம்பழங்களை விட மாம்பழத்தின் விதைப்பகுதியில் அதிக அளவு சத்து உள்ளது.

மீன்களுக்கு சமமான புரதச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி,  வைட்டமின் பி12, நார் சத்துக்கள், மெக்னீசியம் பேட்டி  ஆசிட் அதிகம் உள்ளது.

மாவிதை பொடி தயாரிக்கும் முறை ;

மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளை வீசி விடாமல் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் காயவைத்து அதை உடைத்தால் அதிலிருந்து பருப்பு இருக்கும் .அதை சிறிதாக நறுக்கி  மூன்றில் இருந்து நான்கு நாட்கள்  காயவைத்து நெய்யில் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும் .தேவைப்படும்போது நெய் அல்லது தேனிலோ கலந்து சாப்பிடலாம்.

ஒரு ஸ்பூன் மாவிதை  பொடியை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து அல்லது ஒரு ஸ்பூன் உருக்கிய நெய்யில் கலந்தோ காலை அல்லது மதிய வேலைகளில் எடுத்துக் கொள்ளலாம் இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.சிறிய குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் அளவு கொடுத்தால் போதும் .

மாவிதை பொடியின் பயன்கள்;

பொதுவாக மாம்பழம் உஷ்ணத்தை கொடுக்கக் கூடியது .ஆனால் அதில் உள்ள பொக்கிஷமான விதைப்பகுதி உடல் உஷ்ணத்தை குறைக்க கூடியது .நாவறட்சி ,நடுக்கம் போன்றவற்றை குணப்படுத்தும்.

மேலும் மூலம் ,பவுத்திரம் போன்றவற்றையும் முற்றிலும் குணமாக்குகிறது. கண் பார்வை திறனை அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த விதை பொடியை தண்ணீரில் ஒரு ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து நாட்டு சக்கரை கலந்து இரண்டு மாதங்கள் எடுத்துக்கொள்ளும் போது உடல் எடை குறையும்.

அதுபோல் தைராய்டு பிரச்சனை ,ஹார்மோன் சார்ந்த பிரச்சினை உள்ளவர்களும் மாவிதை  பொடிகளை எடுத்துக் கொள்ளலாம்.

வயிற்றுப்போக்கு ,வயிற்று கடுப்பு போன்றவை இருப்பவர்கள் இந்த மாவிதை  பொடிகளை தேனில் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் நீரிழிவு நோயாளிகள், பிளட் பிரஷர் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் போது கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள புழுக்கள் தொந்தரவு இருந்தால் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வதை விட இந்த இயற்கையான பொடியை கொடுத்து வரும்போது குடல் புழுக்களை அளித்து விடும்.

பெண்களுக்கு  மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் இந்த மாவிதை  எடுத்துக் கொள்ளும் போது கட்டுப்படுத்தும்.

எனவே இந்த மாம்பழ சீசனை தவறவிடாமல் மாம்பழத்தின் கொட்டைகளை தூக்கி வீசி விடாமல் அதன் விதைகளை சேகரித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் நேரங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Recent Posts

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

19 minutes ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

1 hour ago

ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து… அஜித்-ன் கார் விபத்து எப்படி நடந்தது?

ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…

2 hours ago

தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!

தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…

4 hours ago

AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

15 hours ago