அடேங்கப்பா.!காலையில் தண்ணீர் குடிச்சா இவ்வளவு நன்மைகளா ?

Published by
K Palaniammal

Drinking water-காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

தண்ணீர் :

தண்ணீர் என்பது பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ தேவையான ஒன்று. இந்த தண்ணீரை நாம் வெறும் வயிற்றில் குடிக்கும்போது பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஜப்பானிய மக்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணம் அவர்கள் காலையிலேயே பல் கூட துலக்காமல் தண்ணீரை குடிப்பார்களாம் என்று கூறுகிறார்கள். அதனால்தான் நாள் முழுவதும் அவர்கள் சோர்வடையாமல் இருக்கிறார்கள்.

காலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

ஒரு கிளாஸ் காலையிலேயே தண்ணீர் குடித்து விட்டால் சிறிது நேரத்திலேயே நமது உடல் மல  கழிவுகளை நீக்கி உடலை சுத்தம் செய்து விடும்.மலச்சிக்கல் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.

உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேறி புத்துணர்ச்சியாக இருக்கும். இதனால் பசி தூண்டப்படும், மேலும் நம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை  உடல் உறுஞ்ச ஏதுவாகவும் இருக்கும்.

நீர்ச்சத்து குறைந்து விட்டாலே தலைவலி ஏற்படும். இப்படி தலைவலி தொந்தரவு இருப்பவர்கள் அதிகாலையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால் விரைவில் தலைவலி வராமல் காத்துக் கொள்ளவும்.

வயிற்றில் உள்ள அதிக படியான அமிலத்தன்மையை  குறைத்து அல்சர் புண் வராமல் பாதுகாக்கும். மேலும் உடலில் 24 சதவீதம் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.

நம் உடல் 70 சதவீதம் நீரால் ஆனது தான், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

நம் குடல்  சுத்தம் இல்லை என்றால் முகப்பரு ,மங்கு ,கருமை போன்று தோன்றும். இதனால் நம் முக அழகே  கெட்டுவிடும். இவற்றை தடுக்க தினமும் காலையில் தண்ணீர் குடித்து விட்டோம் என்றால் நாளடைவில் முகம் அழகாக மாறும், பருக்கள் ஏற்படாமலும் பாதுகாப்பும்.

நம் உடலில் நிணநீர் மண்டலத்தை  வலுவடைய செய்யும் ,இந்த நிணநீர் மண்டலம் தசை, நாளம், உறுப்புகளை ஒன்றிணைத்து செயல்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஒரு சிலருக்கு தண்ணீர் காலையிலே குடித்தால் வாந்தி ஏற்படும். இது குறிப்பாக உடலில் பித்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த நிலை வரலாம். இதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது .தொடர்ந்து குடிக்கும் போது நம் உடலில் உள்ள பித்தம் வெளியேறி நாளடைவில் வாந்தி ஏற்படுவது நின்றுவிடும்.

ஆகவே நம் எல்லோருக்குமே அழகாகவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் ஆசைப்படுவோம் .இதற்கு  தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரை குடித்து வந்தாலே போதும் .

Recent Posts

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

22 minutes ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

2 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

2 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

2 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

3 hours ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

4 hours ago