சோம்பு தண்ணீர் -சோம்பு தண்ணீர் குடிப்பதால் நம் உடலின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
சோம்பு சமையலில் வாசனை பொருளாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை தண்ணீரில் ஊற வைத்து அல்லது கொதிக்க வைத்து குடிக்கும்போது பல அரிய நன்மைகளை நமக்கு தருகிறது.
கால்சியம் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,வைட்டமின் ஈ ,வைட்டமின் கே, பொட்டாசியம் ,மாங்கனிசு, துத்தநாகம், தாமிரம், செலினியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ,லூட்டின், பென்சோன் போன்ற இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளது.
ஒரு ஸ்பூன் சோம்பை இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அது ஒரு டம்ளராக வந்த பிறகு வடிகட்டி மிதமான சூட்டில் உணவுக்குப் பின் 10 நிமிடம் கழித்து குடித்து வரலாம் அல்லது அதை பொடியாக்கி மிதமான சூடான தண்ணீர் கலந்தும் குடிக்கலாம். பச்சையாகவும் சாப்பிட்டு வரலாம்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவுற முயற்சி செய்பவர்கள் சோம்பு தண்ணீரை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் இது கரு கலைப்பை கூட ஏற்படுத்தும்.
எனவே சோம்பு தண்ணீரை உணவுக்குப் பின் குடித்து வரலாம் அல்லது டீ காபிக்கு பதில் வாரத்தில் மூன்று முறையாவது குடித்து வந்தால் அதன் நன்மைகளை பெற்று ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழலாம்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…