துவரைக்காய் என்பது, காய்ந்து, தோலுரித்த துவரம் விதைகளிலிருந்து துவரம் பருப்பு எடுக்கப்படுகிறது. அதே துவரையை காயாக இருக்கும்போது உரித்து அதன் பச்சையான விதைகளை எடுத்தும் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
தற்போது நாம் இந்த துவரைக்காயை வைத்து எப்படி குருமா செய்வது என்று பார்ப்போம்.
துவரைக்காயிலிருந்து கொட்டைகளை உதிர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயுடன் பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். அடுத்து வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தக்காளியைப் போட்டு கூழாகும்வரை வதக்க வேண்டும். இதில் உதிர்த்த துவரைக்கொட்டைகளைப் போட்டு வதக்கி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கொட்டைகள் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும்.
அதன்பின், கொட்டைகள் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கருவேப்பிலைப் போட்டு குழம்பை அடுப்பிலிருந்து இறக்குங்கள்.இந்த குருமாவை இட்லி, தோசை மற்றும் சோற்றுடன் கலந்து சாப்பிடலாம். இப்பொது சுவையான துவரைக்காய் குருமா தயார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…