இந்தாண்டு பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலுடன் சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கலையும் வைத்து கொண்டாடுவோம்.செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
சம்பா கோதுமை ரவை : ஒரு கப்
பாசிப் பருப்பு : அரை கப்
வெல்லம் : 2 கப்
நெய் : அரை கப்
ஏலக்காய்ப் பொடி : அரை டீஸ்பூன்
ஜாதிக்காய்ப் பொடி : ஒரு சிட்டிகை
பச்சைக்கற்பூரம் : ஒரு சிட்டிகை
இவற்றுடன் முந்திரி, பாதாம், உலர் திராட்சை சிறிதளவு எடுத்து கொள்ளவும்
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதும் எண்ணெய் விடாமல் எடுத்து வைத்துள்ள சம்பா கோதுமை ரவையையும் மற்றும் பாசிப் பருப்பையும் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ள வேண்டும்.இதன் பின் எடுத்து வைத்துள்ள ஒரு குக்கரில்இரண்டையும் சேர்த்து நான்கு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை குறைவான நிலையில் வைத்து கொள்ளவேண்டும்.குக்கரில் நான்கு விசில் வரும் வரை அதனை நன்றாக வேக விட வேண்டும்.
இதன் பின் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி நன்கு கரைத்து அதனை வடிகட்டி பின்னர் ஒரு கடாயில் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து இப்பொழுது வெல்லக்கரைசலின் பச்சை வாசனை போனதுமே முன்பு குக்கரில் வைத்து உள்ள கோதுமை ரவை கலவையில் இந்த சர்க்கரை கரைசலை ஊற்றி இலேசான தீயில் கிளற வேண்டும் அதனுடன் ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி மற்றும் முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து கொண்ட பிறகு நெய் விட்டுக் கிளறி எடுத்தால் சுவையான சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல் ரெடி..
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…