சர்க்கரை பொங்கல் , கற்கண்டு பொங்கல், எல்லாம் தெரியும் ஆனால் இது என்ன கரும்புச்சாறு பொங்கல் என்று தானே நினைக்கிறீர்கள் சுவையான கரும்புச்சாறு பொங்கல் செய்யலாம்
பச்சரிசி – ஒரு கப்
நறுக்கிய பேரீச்சை – கால் கப்
முந்திரி – 25 கிராம்
பாசிப் பருப்பு – அரை கப்
கரும்புச் சாறு – 2 கப்
நெய் – சிறிதளவு
ஏலக்காய்த்தூள் -சிறிது
வெறும் ஒரு வாணலியில் பாசிப்பருப்பை நன்றாக வாசனை வரும் வரை வறுத்து அதன் பின்னர் எடுத்து வைத்துள்ள பச்சரிசியோடு சேர்த்து கழுவ வேண்டும்.பிறகு குக்கரில் இதனை இட்டு இரண்டு கப் கரும்புச்சாறு மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து கொள்ள வேண்டும்.கவனமாக மூன்று விசில்கள் வரும் வரை நன்றாக வேக வைத்து இறக்கவும்.
குக்கரில் பிரஷரானது போனதும் ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கி நறுக்கி வைத்துள்ள பேரீச்சை, முந்திரி மற்றும் ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து அதை பொங்கலில் இட்டுக் கிளறியப் பின்னர் அனைவருக்கும் பரிமாறுங்கள். மேலும் கரும்புச்சாறே பொங்கலுக்கு தேவையான இனிப்பைத் தருவதால் இதற்கு சர்க்கரை தேவையில்லை.மேலும் தங்களுக்கு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.இப்பொழுது சுவையான கரும்புச்சாறு பொங்கல் ரெடி.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…