நமது வீட்டில் உள்ள குழந்தைகள் காலையிலும், மாலையிலும் தேநீரோடு சேர்த்து பிஸ்கட், வடை போன்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுண்டு. அதற்கு நாம் கடையில் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதை விட, நாமே செய்து கொடுப்பது நல்லது.
தற்போது இந்த பதிவில், சுவையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வெண்ணெயை உருக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் போடி செய்த சீனியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெண்ணிலா சுகர் பவுடர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பின் பிசைந்த மைதா மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் மெல்லியதாக ட்ரேயில் எண்ணெய் தடவி, அதில் பிசைந்த மாவை சிறிய வட்ட வடிவ பிஸ்கட்டுகளாக தட்டி இடைவெளி விட்டு வைக்க வேண்டும். பின் நடுவில் முந்திரியை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
பின்பு, 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 10 நிமிடங்கள் வரை வைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான பட்டர் பிஸ்கட் தயார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…