சுவையான உருளைக்கிழங்கு மசாலா கறி செய்வது எப்படி?

Published by
லீனா

நமது அன்றாட வாழ்வில், நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அதிலும், உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி நாம் செய்கின்ற அனைத்து சமையல்களையும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு.

தற்போது இந்த பதிவில் சுவையான உருளைக்கிழங்கு மசாலா கறி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • உருளைக்கிழங்கு – 1
  • கரத – 1
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • கொத்தமல்லி, புதினா – ஒரு மேசைக்கரண்டி
  • வெங்காயம் – 1
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
  • கறிமசால் தூள் – அரை தேக்கரண்டி
  • மாயாஜால் தூள் – அரை தேக்கரண்டி
  • தேங்காய் – 4 மேசைக்கரண்டி

தாளிக்க

  • எண்ணெய் – சிறிதளவு
  • பட்டை – 1 துண்டு
  • ஏலக்காய் – ஒன்று
  • கிராம்பு – 2
  • காய்ந்த மிளகாய் – ஒன்று
  • கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சதுர துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின், கேரட், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்க வேண்டும். பின் தேங்காய் துருவலில் பாதியை அரைத்து பால் எடுக்க வேண்டும். பின் மீதியை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும். பின் வெங்காயத்தை முதலில் போட்டு வதக்கி விட்டு, தக்காளி, கேரட் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.

இவை பாதி வதங்கியவுடன், உருளைக்கிழங்கு மற்றும் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பின் தேங்காயில் இருந்து எடுத்த இரண்டாவது பாலை ஊற்றி காய்களை நன்றாக வேகா விட வேண்டும். வெந்தவுடன் முதல் பாலை ஊற்றி, சூடேறியதும் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

27 minutes ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

57 minutes ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

1 hour ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

1 hour ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

2 hours ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

2 hours ago