நமது அன்றாட வாழ்வில் பல விதமான விழாக்களை கொண்டாடுகிறோம். இந்த விழாக்களில் நமது இல்லங்களில் முதன்மையான இடத்தை பெறுவது பலகாரங்கள் தான். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு சீடை செய்வது எப்படி என்று பாப்போம்.
முதலில் பச்சரிசியை களைந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஊற வைத்த அரிசியை நீரை வடித்து ஈர அரிசியை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பொட்டுக் கடலையை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி பாகு போல தயார் செய்ய வேண்டும். பாகில் ஈர அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளற வேண்டும். அதனுடன் பொட்டுக் கடலை மாவு துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பின் இதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வருமாறு பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான இனிப்பு சீடை தயார்.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…