அசத்தலான குடைமிளகாய் கறி செய்வது எப்படி தெரியுமா?

Published by
லீனா

நமது அன்றாட வாழ்வில் சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது.  காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கிறது.

தற்போது இந்த பதிவில் சுவையான குடைமிளகாய் கறி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • குடைமிளகாய் – ஒன்று
  • மிளகாய் வற்றல் – 3
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி
  • கடுகு – அரை தேக்கரண்டி
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கல் உப்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை

முதலில் குடைமிளகாயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் மிளகாய் வர்றளின் காம்பை கிள்ளி விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து, பின் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாயை போட்டு ஒரு நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

ஒரு நிமிடம் பிரட்டிய பிறகு தட்டை வைத்து மூடி 4 நிமிடம் வேக வைக்க வேண்டும். மூடி வைத்தால் எளிதில் வெந்து விடும். பின் மிக்சியில், தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் வற்றல் மற்றும் உப்பு சேர்த்து 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் 4 நிமிடம் கழித்து மூடியை திறந்து மீண்டும் ஒரு முறை கிளறி விட வேண்டும்.  5 நிமிடம் கழித்து திறந்து, நன்கு கிளறி காய் நன்கு வதங்கியதும் அரைத்த விழுதை போடா வேண்டும். பின் நன்கு கிளறி மசாலா ஒன்றாக சேர்ந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான குடைமிளகாய் கறி தயார்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago