Pimples [File Image]
நம் முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இந்த முகப்பருவும் ஒன்று. இது இளம் பருவத்தினருக்கு மிகப்பெரிய பிரச்சனையும் மன கவலையையும் உண்டு பண்ணும். எனவே முகப்பரு ஏன் வருகிறது அதை எப்படி தடுக்கலாம். மேலும், வந்தால் அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம் முகத்தில் முகப்பரு ஏற்பட பல காரணங்கள் உள்ளது.
வேப்ப இலை சிறிது எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பருக்கள் மீது வைத்து வர பருக்கள் விரைவில் மறையும். அதுமட்டுமில்லாமல் பரு ஏற்பட்ட அந்தக் கரும்புள்ளிகளும் நீங்கும் இந்த முறையை வாரத்தில் மூன்று நாட்கள் இரவு நேரத்தில் பயன்படுத்தலாம்.
கடலை மாவுடன் ரோஸ் வாட்டர் கலந்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வெளியில் சென்று வந்த பிறகு போட்டு வரலாம். முகப்பரு உள்ளவர்கள் முகத்தை அழுத்தி தேய்த்தல் கூடாது.
கடுக்காய் பொடி, துளசி பொடி, சந்தன பொடி, வேப்ப இலை பொடி, மஞ்சள் தூள், அதிமதுரம் பொடி ஆகியவற்றை உங்கள் முகத்துக்கு தேவையான சம அளவு எடுத்து தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். மசாஜ் செய்யக்கூடாது.
இந்த பவுடர்களை நாட்டு மருந்து கடையில் வாங்கி பயன்படுத்தலாம். வாங்கும் போது அதன் காலாவதி தேதிகளை பார்த்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு 40 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பருக்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
இந்த முறையை பயன்படுத்தும் போது கெமிக்கல் கலந்த க்ரீம், ஃபேஸ் வாஷ் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. முகத்தை கழுவ கடலை மாவு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். வறண்ட சருமமாக இருந்தால் பச்சைபயிறு மாவு பயன்படுத்தி முகத்தை கழுவலாம்.
மேலும், பழங்கள் மற்றும் கீரைகளை அதிக அளவு நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இந்த முறைகளை பயன்படுத்தினால் மிக விரைவில் எப்பேர்பட்ட பருவாக இருந்தாலும் சரி செய்யலாம்.
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…