facebeauty [Imagesource - Representative]
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். அதிலும், பெரும்பாலானவர்கள் இயற்கையான முறையில் முகத்தின் அழகை மெருகூட்டுவதை தவிர்த்து, கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி தான் பயன்படுத்துகின்றனர். இதனால், நமது சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கெமிக்கல் கலந்த கிரீம்களை நாம் பயன்படுத்துவதால், உடனடியாக முகம் பளபளப்பானாலும் அதன் பின்பு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால், நாம் இயற்கையான முறைகளை பயன்படுத்தும் போது, நமக்கு தீர்வு பொறுமையாக கிடைத்தாலும், அது நிரந்தரமானதாய், பக்க விளைவுகள் இன்றி இருக்கும்.
எனவே இப்படிப்பட்ட கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்த்து, வீட்டிலேயே இயற்கையான முறையில் எப்படி முகத்தை பளபளக்க செய்யலாம் என்பது பற்றி தற்போது இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
தக்காளி, சீனி இந்த இரண்டு பொருட்களுமே நமது வீடுகளில் எப்போதும் இருக்கக் கூடிய ஒன்றுதான். இது மிகவும் விலை குறைவானதும் கூட. தக்காளியை சரி பாதியாக வெட்டிக்கொண்டு, அதனை சீனியை தொட்டு முகத்தில் அந்த சீனி கரையும் வரை நன்கு முகத்தில் தடவி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இப்படி செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, முகம் பளபளப்பாகவும் மாறும். இவ்வாறு நாம் வெளியில் எங்காவது செல்ல வேண்டிய சூழல் இருந்தால், விலை கொடுத்து அழகு நிலையங்களுக்கு சென்று முகத்தை பளபளக்க செய்யாமல், வீட்டிலேயே 30 நிமிடங்களில் நமது முகத்தை நாமே பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த முறை ஆகும்.
தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும், இறந்த செல்களை நீக்கவும் உதவுகிறது. இது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. மேலும், தக்காளியில் உள்ள லிகோபின் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…
கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…