Evening snacks-அசத்தலான சுவையில் மசாலா சுண்டல் எப்படி செய்யலாம் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
சுண்டலை எட்டு மணி நேரம் ஊற வைத்து அதை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் பட்டை ஏலக்காய் ,கிராம்பு சேர்த்து நான்கு விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த பிறகு மஞ்சள் தூள் ,மிளகாய் தூள், கறி மசாலா தூள் சேர்த்து கலந்து விட்டு இஞ்சியை தட்டி சேர்த்துக் கொள்ளவும். இப்போது அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இரண்டு நிமிடம் கழித்து வேக வைத்துள்ள சுண்டலை சேர்த்து கிளறி விடவும்.
மசாலாவில் படும் வரை கிளறிவிட்டு அதில் அரை மூடி தேங்காயை துருவி சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் சுவையான சுண்டல் மசாலா தயாராகிவிடும். குழந்தைகளுக்கு சத்தான மாலை நேர உணவாக கொடுப்பது நல்லது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…